80
இளங்குமரனார் தமிழ்வளம் 40
-
விளையாட்டாகக் கூட இகழ்ந்து பேசாமை பண்பாடு
(995)
பகைவரிடத்தில் அமைந்த நலமும் பாராட்டல் பண்பாடு (995) நகை முகத்தாராக விளங்குவது பண்பாடு
(999)
சொல்லும் சொல்லே குடிப்பிறப்பைக் காட்டும் பண்பாடு (959) பெரியவர் முன் காதோடு காது பேசுதல், சேர்ந்து சிரித்தல்
பண்பாட்டுக்கேடு (694)
மது அருந்துதல் சூது விரும்புதல் பாலுணர்வுக்கேடு என்பவை
பண்பாட்டுப் பேரழிவுகள் (920)
ஒருமை மகள் போல ஒருமை மகனாகத் திகழல் வான்சிறப்புப்
பண்பாடு
(974)
இவ்வாய்மொழிகள்பண்பாட்டுத் தூவல்கள் இல்லையா?
வள்ளுவத்தின் நூறாம் அதிகாரம் பண்புடைமை; 99ஆம் அதிகாரம் சான்றாண்மை. குடிமை மானம் பெருமை (96,97, 98) என்பவற்றைக் கூறிய வரிசையின் நிறைவு பண்புடைமையாம்.
(100)
"தோற்றத்தால் வேற்றுகை இல்லாப்பிறப்பினர் எனினும் என்ன, பண்பாட்டில் ஒத்தவராகத் திகழ்கிறார்களா? பண்பாட்டின் ஒப்பே மாத்தர் ஒப்பு.
66
99
(993)
"தன் கூர்மையால் பிற கருவிகளையும் கூர்மையாக்குவது அரம். அதுபோல் தன் அறிவுத்திறத்துடன் பிறரையும் அறிவுத் திறத்தராக மாற்ற வல்லாரும் உளர். அவர்க்கு மக்கட் பண்பாடு இல்லை எனின் அவர்கள் மரமாவரேயன்றி மக்கள் ஆகார்" (997)
"ஒளிமிக்க பகல் பொழுது கூட, மகிழ்ந்து பழகுதல் இல்லாத பண்புக்கேடர்க்கு இருள் கப்பிய இரவுப் பொழுதே யாகும்"
(999)
"பண்பாடு இல்லாதவன் செல்வம் கல்வித்திறம் என்பன வெல்லாம் நல்லபாலே எனினும் அதனை வைத்துள்ள கலத்தின் தீமையால் கெட்டுப்போவது போலக் கெட்டுப்போகும்" (1000)
பண்புகளின் நிறைவு சான்றாண்மை; அதன் வெளிப் பாட்டு நலம் பண்புடைமையாம் பண்பாடு,
உள்ளநிறைவில் வாய்பேசும்' என்பது வழங்குரை, "நினைத்தலும் செய்தலோடு ஒக்கும்" என்பது பரிமேலழகம்