பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

இத்தகைய எண்ணச் சூழலிலே நாம் புகுங் காலையில், ஒருவன் தான் கெடலின்றி, தன் மன்பதையையும் சேர்த்துக் கெடுக்கும் ‘கழகத் தலைமைப் பொறுப்பு' ஏற்று நிற்பான் ஆயின் அவனைப் பல்லாற்றானும் எச்சரிக்க வேண்டுவது கடமை என உணர்வோம். அவ்வெச்சரிக்கை காட்டுதல் அறிந்தோர் கடன்; அறவோர் கடன்!

குடிகெடுக்கும் கேடுகள் பலப்பல! அவற்றுள் ஒன்று வெஃகுதல்; பிறர் பொருளை விரும்புதல். பிறர் பொருளை விரும்புதல் குடிகேடா?

"அது வேண்டும், இது வேண்டும் என்று ஓயாமல் ஒழியாமல் தேடி அலைவது கூடாது; போதும் என்ற மனம் வேண்டும்; ன்றேல் அமைதி கிட்டாது.

66

55

95

வ்வாறு

சையே அல்லல்களுக்குக் காரணம் பெரியோர் உரைமொழிகள் உண்மையை அறிவோம். ஆனால் இந்த ஆசையினும், கொடிய ஆசை பிறர் பொருளை வெஃகும் (கவர விரும்பும்) ஆசை!

ஒருவன் நல்ல பொருளை வைத்திருப்பான்; விரும்பியே வைத்திருப்பான்; அப்பொருளை ஒருவன் பெற நினைப்பது