பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இளங்கோவின் ‘மாலை மார்ப ! நூலறி புலவ ! செருவில் ஒருவ பொருவிறன் மள்ள ! அந்தணர் வெறுக்கை ! யறிந்தோர் சொன்மலை ! மங்கையர் கணவ ! மைந்த ரேறே ! வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ ! பலர்புகழ் கன்மொழிப் புலவ ரேறே ! அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக ! கசையுநர்க் கார்த்தும் இசைபே ராள ! அலங்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் ! மண்டமர் கடந்தகின் வென்ரு டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்! பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்' என நக்கீரர் முருகனைப் பரவுதலாகப் பாடியுள்ள பகுதி இன்று தமிழ் மந்திரம் போலச் சொல்லிப் பூசிப்பதற்கு உரியதாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. நெடுநல்வாடையில் ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங் க்ளாகிய கூதிர்காலத்தைப் பற்றி இக்கவிஞர் வருணித் துள்ள பகுதி இன்றும் ஒத்திருக்கக் காண்கிருேம். பெரும் பனி நலிய வாட்டுதலையும், பலர் .ெ கா ள் வளி க்க ட் ைட கொண்டு தீக்காய்வதையும், மக்க ளு ைடய தாடை பு ைட த் து க் கொண் டு அடித்துக்கொள்வதையும், விலங்குகள் மேய்ச்சலேக் கூட ம ற ந் து கிடப்பதையும், பறவைகள் செயலற்று வீழ்வதையும், கறவைப்பசுக்கள் கன்றுகள் முட்டிப் பால் கொள்வதைத் தவிர்க்க முற் படுவதையும் கவிஞர் அழகுற எடுத்து இயம்பியுள்ளார். குன்றே குளிர்ந்து வந்தால் ஒத்த கூதிர்காலம் அது என்று இவர் கூறியுள்ளார். அப்பகுதி நேரிற் கண்டு இன்புறத் தக்கது. தலைவனப் பிரிந்துள்ள தலைவி தன் பிரிவுத் து ய ர | ல் வருந்துகிறவனுடைய கண் களி லி ரு ங் து தோன்றும் நீர்த்துளிகளைச் செவ்விய வி ர ல் களால்