பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை வாழ்வு தொடங்கிய நிலேயில் ஒரு கணவனும் மனேவியும் தங்களுக்கு ஒரு செல்வப் பிள்ளே வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே பிள்ளை பிறக்கும் முன்பாகத் தோன்றும் அறிகுறிகளே பெருமகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத் தவையாம். பிள்ளை பிறந்தபின், அதைச் சீராட்டுவதிலும் பாராட்டு வதிலும் வாழ்வு இன்பநடை போடுகிறது. மனத்திற்கு இன்பஞ் சேர்க்கும் அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் பலவிதமாகக் கொஞ்சிக் குலவுவதைக் காண்கிருேம். காலேயும் கையையும் ஆட்டிக்கொண்டு போட்ட இடத்திலேயே கிடந்த குழந்தை குப்புறக் கவிழ்ந்து கொண்டதும் ஒரு குதூகலம் பிறக்கிறது. அது வயிற்ருல் நகரத் தொடங்கும்போது புது மகிழ்ச்சி தோன்றுகிறது. அந்தச் சின்னஞ்சிறிய குழந்தை தவழுவதும், எழுவதும், ஆடுவதும் கை வீசுவதும், மழலைமொழி பேசுவதும், சிரிப் பதும் நடப்பதும் எல்லாம் புதுமையாகவும் இன்பமாகவும் இருக் கின்றன. சிற்றிளம் பருவத்தில் அக்குழந்தையின் செயல் நிலைகள் ஒவ்வொன்றையும் குறித்துப் பேசுதலும், கொஞ்சுதலும் பெற்றேர்க்குப் பெரிதும் இன்பம் தருவனவாம். இந்த இயல்பை மனத்துட் கொண்டு முன்னேத் தமிழ்ப் புலவர்கள் பிள்ளைத் தமிழ் நூல்கள் பல இயற்றி யுள்ளார்கள். பிள்ளேத் தமிழ்நூல் இயற்றிய பழம்பெரும் புலவர்கள், தாம் தாம் விரும்பி வழிபடும் தெய்வங்களில் ஒன்றைப் பிள்ளே நிலையில் வைத்துப் பாடியிருக்கிருர்கள். - அவர்கள் தம் அரிய நூல்களில் அத்தெய்வப் பிள்ளைகளே ஆடவும் பாடவும் வைத்தும், தாலாட்டியும் சீராட்டியும் பாராட்டியும் நீராட் டியும் மகிழ்ந்திருக்கிருர்கள். 1-14