பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவழும் பருவத்தில் மழலை மொழி குழறும் குழந்தை தன் உடல் ஆட்டி ஆட்டி மன மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்கிறது. இதனையே செங்கீரையாடுதல் என்பர் புலவர். கண்ணுக்கு, விருந்தளிக்கும் இந்தக் காட்சியைக் கண்ட தாய், தன் குழந்தையை மேலும் மேலும் செங் -கீரை ஆடச் செய்து கண்டு மகிழ்கிருள். 2. ஆடாய் ஆடாய் செங்கீரை. நெஞ்சை யள்ளும் சிரிப்புடனே நீளத் தவழ்ந்து வந்திங்கே பிஞ்சுக் கையும் முழங்காலும் பெரிதும் தேய நின்றபடி அஞ்சொல் மழலைத் திருவாயால் அப்பா அம்மா எனக்குழறிக் கொஞ்சி யாடாய் செங்கீரை குலுங்கி யாடாய் செங்கீரை! சின்னஞ் சிறிய செவ்வாயில் சிரிப்பு முத்துத் தோன்றிடவே கன்னக் குழியின் இருமுத்தும் கவலே போக்கத் தோன்றிடவே பொன்னின் உடலில் வியர்வையெனப் புதிதாய்ப் பலமுத் தரும்பிடவே அன்பே யாடாய் செங்கீரை அமுதே ஆடாய் செங்கீரை. இருகை தட்டி வருகவென இனிதுன் அப்பா அழைத்திடவும் இருந்த அன்னை மடிவிட்டே இறங்கித் தவழ்ந்து விரைந்தாய்நீ திருவாய்க் கடையில் பாலொழுகச் சிரிக்கும் அழகே பசும்பொன்னே அருமைத் தமிழே செங்கீரை • ஆடாய் ஆடாய் செங்கீர்ை. 117