பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடைய நன்மையே இருக்கிறது. கட்டியிருக்கும் ஆடையைப் போல் கைவிடாமல் காக்கும் பண்பு தலைவனுக்கு இருக்க வேண்டும்! ஏடு கிழிந்தாலும் எண்ணம் அழியாது! - விசிறிக்குப் புழுக்கம் எது? அரசனுக்குத்தான் அச்சம் அதி கம்! குடியரசுக்கு மட்டும் எதிர்க் கட்சி ஓர் அங்கமல்ல; ஒவ்வோர் உள்ளத்திலும் ஓர் எதிர்க்கட்சி அங்கமாக இருத்தல் வேண்டும்! 'உலகம் முன்னேறுகிறது’ எனும் போது வெட்டவெளிகள் சுருங்கிக்கொண்டே வருகின்றன என்று உணர்தல் வேண்டும். வீணை, தொடக்கத்தில் ஒரு புதிய இசைக் கருவி. ஒவ்வொரு காலத்திலும் ஒரு புதிய இசைக் கருவி உருவாக வேண்டும். எரி நட்சத்திரம் எரியும் நட் சத்திரமன்று ! தோணி என்பது பாலம் ! - நீந்தும் கடலால் நீர்வேட்கை தீராது; ஆல்ை நீர் வேட்கை தீர்க்கும் ஆற்றுநீர் கடலிலிருந்தே கிடைக் கிறது ! பிணத்தை எரிப்பதும் புதைப் பதும் பிணத்தின் நன்மைக்காக அல்ல; நம்முடைய நன்மைக் காகவே ! 丞登> குழந்தை பிறக்கும்போது மணி தன் திரும்பி வருகின்றன்; காய் மலரும்போது மரம் திரும்பி வருகின்றது; மழை வரும்போது ஆறு திரும்பி வருகின்றது; ஒன் றையே திரும்பத் திரும்பச் செய் வதுதான் வாழ்க்கை ! உலகத்தில் எழும் போர் உள். ளத்திலிருந்தே எழுகிறது ! ஒடும் ஆற்றுக்கு எப்போதும் நிகழ்காலம் உண்டு. ஆகையால் தான் அது முன்னேற்றத்தில் இருக்கிறது. வரலாறு இறந்த காலத்தைக் காட்டுகிறது. விஞ்ஞானம் நிகழ் காலத்தைக் காட்டுகிறது; இலக் கியமும் மெய்ப் பொருளியலும் மூன்று காலமும் காட்டுகின்றன் ! நிகழ்காலம் உ ண் ணு கி ன் ற உணவு; இறந்த காலம் எச்சில் இல; எதிர்காலம் மாங்கொட்டை. செயலாளி நிகழ்கால த் தி ல் வாழ்கின்றன்; முட்டாள் இறந்த காலத்தில் வாழ்கின்றன்; கையா லாகாதவன் எதிர்காலத்தில் வாழ் கின்ருன். முட்டிாளுக்கும் 6)&lLIT லாகாதவனுக்கும் வாழ் க் ைக எண்ணமாகவே இருக்கிறது ! இறந்த காலம் இற ந் த காலத்தை எண்ணுவதில்ேயே காலம் கழிப்பது பிணத்தை வீட் டில் வைத்துக்கொண்டே இருப் பதுபோல் ஆகும் ! . 15