பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தழொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர்! என்று சத்தியாக்கிரகப் போராட் டத்துக்குப்பிரசாரம்செய்த பெருங் கவிஞரின் இந்த பாடல் வரிகள் எளிய சொற்களிலே இதயத்திலே ஒரு நேர்மையுணர்ச்சியை-நேர் மையோடு கூடிய வீர உணர்ச் சியை வீரத்தோடு கூடிய சாந்த உணர்ச்சியை சத்தியப் பெரு வழி ைய ப் ப ர ப் பு ம் ச க் தி வாய்ந்த வரிகளாக விளங்கு கி ன் ற ன . எ எளிய சொற் களினல்ஒர்ஆழ்ந்த தத்துவத்தைதத்துவச் சார்புடையஒர் உணர்ச் சியை உண்டாக்க முடியும் என் பதை இவ்வரிகள் மெய்ப்பித்து விட்டன். *. தாய்மொழிப்பற்றும் தாய்நாட் டுப்பற்றும் இளைய பாரதத்திலே கொழுந்துவிட்டெரியச் செய்தகவி ஞரின் இலக்கியப்பணி பிரசாரப் பணியாகமட்டுழ்நின்றுவிடவில்லை தமிழ் இலக்கியவரலாற்றிலே ஒரு நிலேயான-தனித்தன்மை வாய்ந்த ஒர் இடத்தைக் கவிஞர் பெற்றுவிட் டாாக - ‘என்கதை’ என்ற அவருடைய தன்வரலாறும், அவளும்அவனும்’ என்றபுேதுமைக்காப்பியமும் 'மலேக் கள்ளன். என்கிற நெடுங்கதையும் என்றும் மின்ைெளி மாருத இலக் கியச் சித்திரங்களாகும். அவருடைய திருக்குறள் உரை" சிந்தனைக்கு விருந்துாட்டுவதாகும். பழைய தமிழ் உரையாசிரியர்கள் ஆங்காங்கேதடம்மாறிப்போவதை யெல்லாம் சுட்டிக்காட்டி ஆங் காங்கே புதிய கருத்துக்களே. பகுத் தறிவு எண்ணங்களை விதைத்து அவர் எழுதியுள்ள உரைகள் இலக் கியத் திறய்ைவுத் துறையினருக்கு வழி காட்டியாக விளங்கக்கூடிய, தாகும். . புதிய தமிழ்நாட்டின் முப்பெருங் கவிஞர்களிலே ஒருவராகத்திகழ்ந்: தவர் நாமக்கல் கவிஞர். கவிச் மணி தேசிகவிநாயகம் பிள்ளை யையும்,பாவேந்தர் பாரதிதாசனே யும்கூற்றுக்குப் பறிகொடுத்த பின் னர், நம்மிடையேயும் ஒரு பெருங் கவிஞர் வாழ்கின்ருர் என்று பெரு, மைப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் உள்ளமெல்லாம் துணுக்குற-துய. ருற-துவண்டிட 28-8-72-ஆம் நாளன்று அவரும் அமரராகி விட்டார். மக்களாட்சியிலே அரசவைக். கவிஞராக விளங்கும் பேறு அவ: ருக்குக் கிடைத்தது. பத்தாண்டு கள் மேலவை உறுப்பினராக இருந்து வந்திருக்கிருர். பாரத. அரசு அவருக்குப் 'பத்ம பூஷன்" விருது வழங்கிச் சிறப்பித்தது. தமிழக அரசு மாதம் ரூ. 250/உதவிப்பணம் வழங்கி வந்துள் ளது. கவிஞரின் சிறந்த நெடுங்கதை. யான மலைக்கள்ளன் திரைப்பட மாக்கப் பெற்றது. அக்கதைக். குரிய உரையாடல்களைக் கலைஞர் எழுதினர் என்பதும் புரட்சி நடி கர் நடித்தார் என்பதும் குறிப். பிடத்தக்க செய்திகள். கவிஞரின் கவிதைகள் 'தமிழன் இதயம்' என்ற தலைப்பில் ஒரு. தொகுதியாக வெளிவந்தன. தமி ழன் இதயம்’ தமிழுணர்ச்சியையும் தேசிய உ ண ர் ச் சி ைய யு.ம். ஒருங்கே மக்கள் மனத்திலே உண்டாக்கிய சிறந்த நூல், போண்டியா, நீ ஒரு கவிஞனடா? என்று பாரதியாரால் பாராட்டப் பெற்ற நாமக்கல் கவிஞரின் பரு. உடல் மறைந்தாலும் தமிழன் இதயத்தில் அவருடைய கவியுரு. மறையாது நிலத்து நிற்கும்,என். பதில் ஐயமில்லை. 61