பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி கனவுகண்ட பாரதப் பெண்கள் அஞ்சா நெஞ்சுடைய இரண்டு கல்லூரி மாணவிகள் ஓடும் புகை வண்டியிலிருந்து குதித்தார்கள். ஒருத்தியின் பையிலிருந்த பொருள் களேத் திருடிக்கொண்டு ஓடிய திருடர்களே விரட்டிப் பிடித்தார்கள். புகைவண்டிக் காவல் நிலையத்தில் அந்தத் திருடர்களை ஒப்படைத்தார் d56,or. - செல்வி அஞ்சலிகுல்கர்னி, செல்வி அல்காநாயக் இருவரும் பம்பா யைச் சேர்ந்த சைடனும் கல்லூரி மாணவிகள். அவர்கள் சர்ச்கேட் நிலேயத்தில் பெண்கள்வண்டியில் ஏறியமர்ந்தார்கள். சிறிது நேரத்தில் அவ்வண்டியில் மூன்று இளைஞர்கள் ஏறினர்கள். அவர்களில் ஒருவன் மோதிரங்கள் சிலவற்றை விற்பனை செய்வதற்காக அப்பெண்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தான். அப்போது அவனுடன் வந்த இருவர் மிக விரைவாக வண்டியிலிருந்து இறங்குவதைச் செல்வி குல்கர்னி கண் டாள். அவளுக்கு ஐயம் தோன்றியது. சட்டென்று தங்கள் பைகளே நோக்கிள்ை. தன் தோழியின் பை திறந்திருப்பதையும், அதிலிருந்த பொருள்கள் குறைவதையும் கவனித்த அவள் சற்றும் காலந்தாழ்த்தா மல் தன் தோழியுடன் ஒடும் வண்டியிலிருந்து கீழே குதித்தாள். உடன் அவள் தோழியும் குதித்தாள். திருடிக்கொண்டு ஓடியவர் களே அவர்கள் இருவரும் விரட்டிப் பிடித்தார்கள். காவல் அதிகாரிகளி டம் ஒப்படைத்தார்கள். செல்வி குல்கர்னி ஒரு காவல் அதிகாரியின் மகள். திருடர்களின் செயலைச் சட்டென்று புரிந்துகொள்ளும் ஆற்ற லும் அஞ்சா நெஞ்சமும் அவளிடம் இயற்கையாக அமைந்திருந்ததில் வியப்பில்லே. அவள் தோழியும் அவளேப் போலத்தானே இருப்பாள். இன்றைய பாரதப் பெண்கள் தீரத்தில் சற்றும் குறைந்தார்களல்ல என் பதற்குச் சான்ருய் விளங்குகின்றர்கள் இக்கல்லூரி மாணவிகள். தவிர-அதைக்கொண்டு வந்தா ஆற்றில் சவாரி செய்வார்கள்? இல்லாத செய்கைதான்! என்ரு லும், இருக்கிறதே பழமொழி! பக்கத்திலேயே ஒளவையை வைத்துக்கொண்டு பழமொழிக்கு விளக்கம் தெரியாமல் இருப்பதா? என்று எண்ணி ஒளவையிடம் விஷயத்தை விளக்கின்ை! ஒளவை சொன்னுள் : 'வீரனே! மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!' என்னும் பழமொழியானது-'மண் - குதிரை நம்பி ஆற்றில் இறங் காதே! என்பதிலிருந்து மருவி விட்டது மக்களிடையே! இரண் டுக்கும் அதிக வித்தியாசம் தெரிய வில்லே யல்லவா? மண்-குதிரை நம்பக்கூடாது! அதாவது மண்-குதிர் என்பதற்கு மணல் மேடு-மண்திட்டு என்பது பொருள். இது ஆற்றின் நடுவில் இருக்கும்! மண்திட்டுத் தானே என்று நாம் கால் வைத்து ஊன்று வோமானல், அது உடனே அழுந்தி சரிந்து விடும்! இந்த மண்-குதிரைத்தான் நம்பி ஆற் றில் இறங்காதே என்ருர்கள் நமது முன்னேர். இந்த மண் குதிர்தான்-மண் குதிரையாக மாறிவிட்டது நாள டைவில்! புரிகிறதா? புறப்படு... . புறப்படு அதிகமான் எனக்காக ஆவலோடு காத்திருப்பான்!” என்ருர் ஒளவை மூதாட்டி. விளக்கம் பெற்ற மழவவீரன், மகிழ்ச்சி கொண்டு குதிரையை முடுக்கி விட்டான். குதிரைகள் வி ை ந் த ன முன்னே-பல்லக்கும் விரைந்தது பின்னே! 讹 72