பக்கம்:இளந்தமிழா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இளந்தமிழா

இளந்தமிழா எழுந்திடுவாய்

  இன்பமெலாம் 
          கொணர்ந்திடுவாய்

வளம்பெருக்கித் தமிழ்நாட்டை

  வானாடாய்ச் செய்திடுவாய்.

காதல்அறம் வீரமெலாம்

   களித்திருந்த மண்ணிதிலே

பேதமையும் ஏழமையும்

   பேர்சொலவும் விடலாமோ?

குறிஞ்சிமணம்; பாரிகொடை,

   கொல்புலியின் கொடிஇமயம்

பொறித்திடுமோர் தனிவீரம்

   போகவிட்டு வாழ்வாயோ?

வள்ளுவனும் கம்பனுமே

   வளர்த்தசுவைத் தீந்தமிழின்

தெள்ளமுதம் கொண்டவன் நீ

   சீர்குலையக் காரணமேன்?

கச்சைகட்டி மார்தட்டிக்

   கண்களிலே ஒளிவீசத்

துச்சமெனப் பயந்தள்ளித்

   துணிவுடனே புறப்படுவாய்.
            
             17 

இ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/19&oldid=1358808" இலிருந்து மீள்விக்கப்பட்டது