பக்கம்:இளந்தமிழா.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குழந்தை வினை

சிந்தை கவர் ஒவியங்கள்;

 செயல் மிக்க சிற்பங்கள்;

கந்தங் கமழுகின்ற

 காமன்மகிழ் பள்ளியறை:

நளபாகத் தறுசுவையில்

 நல்ல நல்ல உண்டிவகை:

அளகா புரியது போல்

 அளவற்ற செல்வங்கள்;

காலுக்குச் சோடு; நல்ல

 காசி நகர்ப் பட்டுடைகள்:

மேலுக்குப் பொன்னணிகள்:

 விதவிதமாய்ச்சுண்ணங்கள்:

இவை யெல்லாம் கற்பனைசெய்;

 தின்பமிகப் பெறுவாரோ?

இவையனைத்தும் கற்பிக்க

 எவ்வாறறிந்திடுவார்?

கனவுலகிற் காண்பதற்கும்

 கருத்திலவை வேணுமன்றோ?

மனக் கோட்டை கட்டுதற்கும்

 வகையறியா ஏழ்மையினர்!

இடிந்த சுவர் விழுகூரை

 எறும்புவளை பழங் கஞ்சி

மடிந்த வால் பன்றியலால்

 மற்றென்ன கண்டுள்ளார்?
           21
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/23&oldid=1359767" இலிருந்து மீள்விக்கப்பட்டது