பக்கம்:இளந்தமிழா.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அழுங்குழந்தை (ஒருநாள் மாலையில் உலவப் போனபோது தெருவில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டு பாடியது.)

ஆருடைய குழந்தை இது

 அழுதேங்கி நிற்பது மேன்? சீருடைய முகம் சிவக்கச்
 சிறுகையால் கண்பிசைந்து விம்மிவிம்மித் தேம்பி
  விழிநீர் மிகப்பெருக்கி அம்மம்மா என்று சொல்லி
  அங்குமிங்கும் பார்க்கிறதே!

(ஆருடைய குழந்தையிது அழுதேங்கி நிற்பது மேன்?)

மையிற் படர்ந்த இருள்

 மாய்க்கவரும் ஞாயிறுபோல் வையத் துயர மெலாம்
  வளரின்ப மாக்க வரும் தெய்வச் சுடர்க்குழந்தை
  சிரித்தமுகம் பொலிவிழந்து நையக்கண் டால் உள்ளம்

நடுங்குகின்ற தென்செய்வேன்?

(ஆருடைய குழந்தையிது அழுதேங்கி நிற்பது மேன்?

           23
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/25&oldid=1359855" இலிருந்து மீள்விக்கப்பட்டது