இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அழுங்குழந்தை
கன்னத்தில் முத்துதிரக்
கவலையிருள் தான்படர என்னத்துக் காகஇந்த இளங்குருத்து வாடினதோ? சின்னஞ் சிறுமொட்டு சிரித்துமகிழ்ந் தாடாமல் கொன்னி இதழ்பிதுக்கிக் குலைகின்ற காரணம்என்?
(ஆருடைய குழந்தையிது அழுதேங்கி நிற்பதுமேன்?)
பூவுலகைப் பார்க்கவந்த
பொன்னாட்டுத் தூதெனவே மேவுமிளங் குழந்தையழ விடலாமோ? விண்ணோர்கள் தாமிதனைப் பொறுப்பாரோ?. தடத்தருகே மைந்தனழத் தேவியரன் தன்னோடும் தேடிவந்த தறியீரோ?
(ஆருடைய குழந்தையிது அழுதேங்கி நிற்பதுமேன்?)
நடுத்தெருவை நம்பிவிட்டு
நாட்கூலி செய்து வந்து கொடுக்குத் தேள் வயிற்றினுடைக் கொடுமையினை ஆற்றிடவே 24