இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூக்காரி பூவொன்றும் வாங்கவில்லை; பூவையுடன் பேசிடவே நாவொன்றும் எழவில்லை; நட்டசிலை யாய்ச் சமைந்தேன் சென்றவளை மீண்டுமினித் தெருவழியே காண்பேனோ? வென்றவளை வென்றுள்ளம் மீட்டிங்கு வாழ்வேனோ! செப்புத் தகட்டிற்குத் தேன்மலரைத் தருவதுபோல் ஒப்பித்தன் உளமென்றன் உளத்திற்கா யீவாளோ? 33 இ 3