பக்கம்:இளந்தமிழா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமை

ஆடியெழும் நாகமதை அடிமிதிக்கும் பருவம்
அளவில்லா உயர்எண்ணம் அனல் வீசும் பருவம்
தேடறிய கலையெல்லாம் நாடுகின்ற சிருவம்
தீஞ்சுவைசேர் கவிக்கனவில் சிறந்திருக்கும் பருவம்

எண்ணிலா இடையூற்றை எதிர்த்தேகும் பருவம்
எட்டாத கொம்பெனினும் ஏறஎழம் பருவம்
கண்ணிமையில் காதல்பணி காட்டுகின்ற போதே
காலனையும் எதிர்க்க எழும் கட்டிளமைப் பருவம்

வெற்றியெல்லாம் பற்றிக்கை வீசுகின்ற பருவம்
விண்ணாடாய் உலகாக்க விரும்புகின்ற பருவம்
பற்றவரும் தோல்விகளை எற்றிவிடும் பருவம்
பண்பெல்லாம் பொங்கியெழிந் தோங்கி வளர்பருவம்

தாழ்வினையும் சூதினையும் தாங்கறியாப் பருவம்
தலைநிமிரந்து தோள்புடைத்துச் சதுர்பேசும் பருவம்
வாழ்வினிலே கசப்பேறா வளரிளமைப் பருவம்
வாழியவோ வாழியதன் மாண்பெல்லாம் வாழி!



41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/43&oldid=1360107" இலிருந்து மீள்விக்கப்பட்டது