பக்கம்:இளந்தமிழா.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள்

வெள்ளைக் குதிரையைப் போலே
துள்ளிக் குதித்திடும் அலையே
வேடிக்கை எத்தனை விந்தைகள் செய்கிறாய்
ஓடித் திரண்டு சுருண்டாய்-பின் ஓங்கி எழுந்து புரண்டாய் (வெள்ளைக்)


புள்ளிக் கருநாகம் போலே
துள்ளிப் படமெடுக் கின்ருய்
போருக்குச் சென்றிடும் வீரப்படை யென்னப்
பாருக் கணியணி யாக-முன்
பாய்ந்து வெருண்டிடச் செய்தாய் (வெள்ளைக்)

நீலப் பெருங்கடல் வேந்தன்
மேலுக் கெழுந்து கொதித்தே
நெற்றி சுருக்கவும் நீயுடன்
தோன்றியே வெற்றி முரசொலி தருவாய்-சிறு மின்னல் அரவமும் புரிவாய் (வெள்ளைக்)


மல்லிகைப் பூவினைப் பறித்து
முல்லை மலருடன் தொடுத்து
வண்ணமாய் உன்முடி வைத்து நடமிட்டுப்
பண்ணும் குழைந்திட வந்தே-நிலப்
பாவைக்குச் சூடுகின் ருயோ? (வெள்ளைக்)

53

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/55&oldid=1460161" இலிருந்து மீள்விக்கப்பட்டது