இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அலைகள்
வெள்ளைக் குதிரையைப் போலே
துள்ளிக் குதித்திடும் அலையே
வேடிக்கை எத்தனை விந்தைகள் செய்கிறாய்
ஓடித் திரண்டு சுருண்டாய்-பின் ஓங்கி எழுந்து புரண்டாய் (வெள்ளைக்)
புள்ளிக் கருநாகம் போலே
துள்ளிப் படமெடுக் கின்ருய்
போருக்குச் சென்றிடும் வீரப்படை யென்னப்
பாருக் கணியணி யாக-முன்
பாய்ந்து வெருண்டிடச் செய்தாய் (வெள்ளைக்)
நீலப் பெருங்கடல் வேந்தன்
மேலுக் கெழுந்து கொதித்தே
நெற்றி சுருக்கவும் நீயுடன்
தோன்றியே வெற்றி முரசொலி தருவாய்-சிறு மின்னல் அரவமும் புரிவாய் (வெள்ளைக்)
மல்லிகைப் பூவினைப் பறித்து
முல்லை மலருடன் தொடுத்து
வண்ணமாய் உன்முடி வைத்து நடமிட்டுப்
பண்ணும் குழைந்திட வந்தே-நிலப்
பாவைக்குச் சூடுகின் ருயோ? (வெள்ளைக்)
53
53