பக்கம்:இளந்தமிழா.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சத்தியம்

அறிவுத் திறமோங்கி

   அழிவுக்கே படை செய்யும் நெறியறியாப் பூமியிலே
   நேர்மையன்பு குன்றியதால் மனிதனெனும் பேரினந்தான்
  மாய்ந்தழிந்து போகாமல் புனிதனிங்கு சத்தியத்தின்
  புன்னகையாம் அன்பஹிம்சை வழியதனைக் காட்ட வந்த
  மகாத்மாவென் றறிவீரே. விழிதிறந்து வாழ்விலவன்
  மெய்யுரைகள் கொள்ளாமல் அணுவைப் பிளந்திடுவோம்
  அழிப்போம் பகைவர்களை எனப் பேசி இறுமாந்தால்
  இவ்வுலகம் அழிவெய்தும்; மாற்றலரை மாய்க்கு முன்னர்
  மாநிலமே வெந்தொழியும். கூற்றுவனாம் அணுப்படையைக்
  கொண்டுகளிப் பெய்தாதீர் மானிடப்பேர் துடைக்க வந்த
  மாயமெனத் தானறிவீர் 

வீணாய் அழியாதீர்

  மேதினியீர் என்றன்பால் எச்சரிக்கை செய்ய வந்தார்
  இன்பமுற நெறி சொன்னார். சத்தியத்தின் சோதியவர்
  தனிவழியைப் பின்பற்றி
           64
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/65&oldid=1359808" இலிருந்து மீள்விக்கப்பட்டது