பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 31 ராகவன் : அதைப்பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க இப்பொழுது நேரமில்லை. உங்கள் புருஷன்மேல் ஆசையிருந்தால் இந்த நிமிஷத்தில் நான் கேட்கிற பணத்தைக் கொடுக்கவேணும். மாலதி : பணம் கொடுத்தால்...? ராகவன் : கடிதத்தையும் கைத்துப்பாக்கியையும் தோல் பையோடு உங்களிடம் கொடுத்துவிட்டுப் போய் விடுகிறேன். மாலதி : சரோஜினி இறந்தது பொய் : அவள் உயிரோடு தானிருப்பாள். ராகவன் : சரி, இப்படி நீங்கள் பேசுவதாக இருந்தால் என்னல் காத்திருக்க முடியாது. நான் போகிறேன். வருகிறதை வாசுதேவன் அனுபவிக்கட்டும். பிறரு டைய குடும்ப விஷயத்தில் தலையிட்ட உங்கள் புருஷ னுக்குச் சரியான தண்டனை கிடைக்கப் போகிறது. நான் புறப்படுகிறேன். (போவது போலத் திரும்புகிருன்.) மாலதி (பயத்தோடு) : ராகவன், உங்களுக்கு இப் பொழுது என்ன வேண்டும் ? ராகவன் : பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத் தால் கடிதமும் துப்பாக்கியும் உங்கள் வசம் வரும். இதோ தோல் பையோடு கொடுக்கத் தயார். மாலதி : பத்தாயிரமா ? அவ்வளவு... ராகவன் : அந்தத் தொகை வீட்டிலிருப்பது எனக்குத் தெரியும். பெட்டிச்சாவியும் உங்களிடம் இருக் கிறது. பணத்தைக் கொடுப்பதோடு உடனே இப்