பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காதல் எங்கே ! தாமோ : அவசியம் வருகிறேன். நீங்கள்கூட எங்கள் சங்கத்திற்கு வந்தால் எங்களுக்கு மிகுந்த சந்தோஷ மாக இருக்கும். உங்களைப் போலப்படித்தவர்களெல் லாம் சங்கத்தில் கலந்து கொள்ளவேனும் என்பது என்னுடைய ஆசை. லலிதா : அதெல்லாம் பின்னல் பார்க்கலாம். தாமோ : இப்பொழுது உங்களை நான் வற்புறுத்தவில்லை. அது சரியல்ல என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், உங்கள் கருத்துக்களையும், உங்கள் பாட்டை யும் எங்கள் சங்கத்திலே கேட்கும் வரையிலே என் னுடைய ஆவல் பூர்த்தியாகாது. நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன். வணக்கம். [போகிருன்.) காட்சி நான்கு [பானுமதியின் வீடு. லலிதா உள்ளே நுழைந்து கொண்டே பேசுகிருள். மாலை நேரம்.) லலிதா : பானு, நீயும் என்ளுேடு வரவேணும். மாட் டேன்னு சொல்லக்கூடாது. உன்னை அழைத்துப் போகத்தான் வந்தேன். பானுமதி : இப்போ எங்கே புறப்பட்டாய்? லலிதா : கலாரசனைச் சங்கத்திற்கு... பானுமதி : அதென்ன சங்கம்? நான் கேள்விப்பட்ட தில்லையே? லலிதா : உங்கள் அண்ணுக.ட அன்றைக்குப் போய் பேசி விட்டு வந்தாரே தெரியாதா உனக்கு?