பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இளமையின் நினவுகள்


அன்றைக்கு என் பிஞ்சு உள்ளத்தில் அவற்றின் பொருளெல்லாம் நன்கு பதியவில்லை என்றாலும் இன்று விளங்குகிறது. அதுவும் ஒருநாளைக்குப் பல அபாயங்கள் நடை பெற வாய்ப்பளிக்கும் விமானம், பஸ், இரயில் போக்குவரத்துக்கள் அதிகமான இன்றை நாளிலே புறாப்பட்டவர் வீடு திரும்பிய பின்தான் வாழ்வது நிச்சயம் என்பதை எல்லோரும் அற்கிறோம். எப்படியாயினும் பாட்டியின் உரையால் மக்கள் மாய்வது எப்போது என அறியாத வகையில் ‘இப்பவோ, பின்னையோ, சற்று நேரத்திலோ’ அமையும் என்பதும், ஆகவே அந்த வாழும் சிறிது நேரத்திலே எவ்வளவு நல்ல செயல்கள் செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவிடவேண்டும் என்பதும், அதுவே மனித வாழ்வின் குறிக்கோளாக அமையவேண்டும் என்பதும் நன்கு விளங்குகின்றன வன்றோ !

இதுபோன்றே பாட்டி எத்தனையோ பாட்டுக்களையும் கதைகளையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவைகளையெல்லாம் நான் மறந்தேவிட்டேன் என்னலாம். பிற்காலத்தில் என் உழவுத்தொழிலை விட்டு, இப்படி ஒரு ஆசிரியனாக வந்து இவற்றை எல்லாம் எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும் என்பதை அன்றே சோதிடத்தின்வழி அறிந்திருப்பேனாயின் ஒருவேளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் பாட்டி சொன்ன அத்தனையும் குறித்துவைத்துக்கொண் டிருப்பேன். அடுத்து வருவதை அறியும் ஆற்றல்தான் நமக்கு இல்லையே. எனவே நினைவிருந்த இந்த இரண்டொன்றோடு நிறுத்தி மேலே செல்லுகிறேன்.