பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டைபாய்டு

167

முடியாத நிலை ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் இந்நோய் ஏற்பட்ட சில மணி நேரத்துக்குள்ளாகவே மரணிக்க நேரலாம்.

இந்நோய் 'கிளாஸ்டிரியம் டெட்டனின்’ எனும் நுண்ணிய நூலிழைக் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்நூல் நச்சுக் கிருமிகள் மனிதக் கழிவுகளில் (மலம்) காணப்படும். மண் தரையிலும் வாழ்கின்றன. தரையில் விழுந்து காயப்படும் ஒருவரது காயத்துக்குள் மண் செல்லுமானால் இந்நுண் நோய்க்கிருமிகள் எளிதாக உடலுள் புகுந்து நோயைத் தோற்றுவிக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் மண் தோய்ந்த சிராய்ப்புக் காயம்பட்டவர் உடனடியாக காயத்தை நன்கு கழுவி நச்சுக் கொல்லி மருந்திட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். தேவைப்படின் ஊசி மூலம் நச்சு முறி மருந்தை உடலினுள் செலுத்துவர். இதைச் செய்யத் தவறினால் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் டெட்டனஸ் நுண்கிருமிகள் உடலில் நன்கு பரவி தசை நார்களை இறுக்கமடையச் செய்துவிடும். உடல் விரைப்படைந்து விடும். இதனால் எளிதில் இறப்பு ஏற்பட ஏதுவாகிவிடும். இந்நோய் அதிகமாக இளஞ்சிறார்களைப் பாதித்து மரணிக்கச் செய்கிறது.


டெலெக்ஸ் : 'தொலை எழுதி', என்று தமிழில் அழைக்கப்படும் 'டெலெக்ஸ்’ இன்றுள்ள செய்தித் தொடர்பு சாதனங்களுள் முக்கியமானதொன்றாகும். இக்கருவி மூலம் வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கு எழுத்து வாயிலாகவே செய்தியை அனுப்ப முடியும். அவ்வாறே வேற்றிடங்களிலிருந்தும் எழுத்து வடிவில் செய்திகளை விரைந்து பெற முடியும். இதற்கான கருவி 'டெலிபிரின்டர்’ (Teleprinter) என்று அழைக்கப்படுகிறது. டெலெக்ஸ் என்பது சுருக்கப் பெயராகும்.

தொலை எழுதிக் கருவியில் தட்டச்சுப் பொறியில் அமைந்திருப்பதுபோல் எழுத்துக்கள் பொறித்த பொத்தான்கள் இருக்கும். அனுப்பும் செய்திக்கேற்ப எழுத்துப் பொத்தான்களை அழுத்தும்போது செய்தி தொலை தூரத்தில் உள்ள எந்திரத்தில் அவ்வெழுத்துக்களாக அப்படியே பதிவாகும்.

தேவைப்படுவோர் தபால்தந்தி துறையினரிடம் கட்டணம் செலுத்தி டெலெக்ஸ் மூலம் செய்தி அனுப்பலாம். தாங்களாகவே தொலை எழுதி எந்திரத்தைப் பெற்று பயன் படுத்த விழைவோர் வாடகைக்கு இவ்வெந்திரத்தைப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டுக்கும் டெலெக்ஸ் மூலம் செய்தியனுப்ப முடியும். தற்காலத்தில் தந்திச் செய்திகளும் டெலெக்ஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.


டைபாய்டு : இது ஒருவகை நச்சுக் காய்ச்சலாகும். இது அடிக்கடி மக்களைத் தொற்றித் துன்பந்தரும் தொற்று நோயாகும். இந் நோயால் குடற் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றது. இதனாலேயே இதைக் 'குடற் காய்ச்சல்’ என்று கூறுவதுமுண்டு. இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு எளிதாகத் தொற்றும் இயல்புடையது.

இந்நோய் 'சால்மொனெல்லா டைபை’ எனும் பாக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது. இந்நோய்க் கிருமிகள் பெரும்பாலும் உண்ணும் உணவுப் பொருட்கள் மூலமே தொற்றுகின்றன. சாதாரணமாக கெட்டுப்போன உணவு வகைகள், பருகும் நீர், பால், தயிர், மோர் போன்றவற்றின் மூலம் குடற் பகுதியை அடைகிறது. பின் அங்குள்ள சுரப்பிகள் மூலம் இரத்தத்தை அடைகிறது. பின் இரத்த வோட்டத்தின் மூலம் உடற்பகுதிகள் அனைத்திற்கும் பரவித் துன்பம் தருகிறது. இந்நோய்க் கிருமிகள் உடலெங்கும் பரவி சுமார் பதினைந்து நாட்கள் கழிந்த பின்னர் காய்ச்சலும் தலைவலியும் தோன்றும். வயிற்றுப் போக்கும் உடல் பலவீனமும் ஏற்படும்; நாவறட்சியோடு நாக்கில் புண்ணும் உண்டாகும். இச்சமயத்தில் குடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. சிலசமயம் குடலில் ஓட்டை, ஏற்படுவதுகூட உண்டு. இந்நோயின் உச்சமாக மண்ணிரல் வீங்கும்; வயிறு புடைக்கும். இச்சமயத்தில் இரத்தத்தில் வெள்ளணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டுவரும். பதினைந்து நாட்களுக்குப்பின் இத்நோயின் கடுமை குறையத் தொடங்கும். அவ்வாறு குறையாது தொடருமேயானால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

இந்நோய் உடலிலும் குறிப்பாக குடலிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இந் நோய் நம்மை அண்டாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இந்நோய்த் தடுப்புக்கென இக்காலத்தில் ஊசி மருந்துகளும் மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்