பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

பல்

தாவர இலைகளின் அடிப்பகுதியில் சிறுசிறு துவாரங்கள் உண்டு. இவை கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகச் சிறிய நுண்துளைகளாகும். இத்துளைகள் வழியாகக் காற்று

ஒளிச்சேர்க்கையை விளக்கும் படம்

உள்ளே நுழைகிறது. இலைகளில் உள்ள பச்சையம் காற்றிலுள்ள கரியமில வாயுவைப் பிரித்தெடுக்கிறது. வேரிலிருந்து வரும் நீருடன் இக் கரியமிலவாயு கலந்து புதுக் கலவையாகிறது. இக்கலவை சூரிய ஒளியின் உதவியால் வேதியியல் முறையில் மாற்றமடைந்து சர்க்கரைப் பொருளாகவும் மாவுப் பொருளாகவும் மாற்ற முடிகிறது. இச்செயலே 'ஒளிச் சேர்க்கை' ஆகும். இவ்வாறு தாவரங்களிலுள்ள பச்சையம் ஒளிச்சேர்க்கைக்கான அடிப்படைப் பொருளாக அமைந்துள்ளது.


நம் வாயின் மேலும் கீழுமாக இரு வரிசைகளில் 32 பற்கள் அமைந்துள்ளன. இவை உண்ணும் உணவை நன்கு அரைத்து மென்று விழுங்கவும் திருத்தமாகப் பேசவும் உதவுவதோடு முகத்துக்கு அழகையும் தருகின்றன.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப்பின் பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன. இவை 'பால் பற்கள்’ என அழைக்கப்படும். இப் பால் பற்கள் மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலுமாக இருபது பற்கள் முளைத்துவிடும். நிலையற்ற இப்பற்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒவ்வொன்றாக விழத் தொடங்கும் பல் விழுந்தவிடத்தில் புதிய பற்கள் முளைக்கும். இவை உறுதிமிக்கவை; நிலையானவை. ஆறு ஆண்டுகட்குப் பின்னர் புதிதாகக் கடைவாய்ப் பற்கள் முளைக்கும். இப்பற்கள் முதுமை வரை விழுவதில்லை.

இவ்வாறு மேல் தாடையில் 16 பற்களும் கீழ்த் தாடையில் 16 பற்களுமாக மொத்தம்32 பற்கள் வாயில் உருவாகி நிலைபெறுகின்றன. இவற்றுள் மேல், கீழ்த் தாடைகளின் முன் வரிசையில் பகுதி நான்கு முன் பற்கள் வெட்டுப் பற்களாக அமைந்துள்ளன. இவை நாம் உண்ணும் உணவை வெட்டுவதற்குப் பயன்படுகின்றன. இரண்டு கோரப் பற்கள் அல்லது நாய்ப் பற்களும் 4 முன் கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. இவை நாம் உண்ணும் உணவை கிழிப்பதற்குப் பயன்படுகின்றன. வாயின் உட்பகுதியில் அமைந்துள்ள 6 கடைவாய்ப்பற்கள் உணவை நன்கு அரைப்பதற்குப் பயன்படுகின்றன.

ஒவ்வொரு பல்லும் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. அவை தலைப்பகுதி, கழுத்துப் பகுதி, வேர்ப் பகுதிகளைக் கொண்டதாகும். வெண்மையாகத் தோன்றும் பகுதி 'எனாமல்' எனப்படும். பற் சிப்பியால் உருவாக்கப்பட்டதாகும். இதன் மேற்பகுதி முழுவதும் சுண்ணாம்புப் பொருளால் பூசப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு இரத்த வோட்டம் ஏதும் வருவதில்லை. இது நாளடைவில் தேய்ந்து போக நேரின் அத்தேய்வை மீண்டும் பழைய நிலையில் பாதுகாப்பதில் மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். கரகரப்பான பொருட்களைக் கொண்டு பல் தேய்ப்பதாலேயே பெரும்பாலும் தேய்வடைகிறது. இதைத் தவிர்க்கமிருதுவான நாருடைய பச்சை மரக் குச்சிகளையோ அல்லது அதற்கென உள்ள பற்பசையோடு கூடிய பல் புருசுகளையோதான் பல் துலக்கப் பயன்படுத்த வேண்டும். அதையும் கீழ் மேலாகவே