பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

மைக்கேற்ப பல்வேறு வடிவினவாக அமைந்துள்ளன.

பூச்சிகளின் வயிறு அமைந்துள்ள அடிப்புறத்தில் சாதாரணமாக ஆறுகால்கள் வெவ்வேறு அளவுகளில் அமைந்துள்ளன. அவற்றின் நுனியில் வளைந்த கூரான நகங்கள் உள்ளன. இவை இருக்கும் இடத்தைப் பற்றிப் பிடிப்பதற்கு மட்டுமல்லாது இரையை கையகப்படுத்தவும் பயன்படுகின்றன. தட்டாரப் பூச்சி போன்றவைகளின் கால்கள் பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கத்தக்கனவாக உள்ளன. வெட்டுக் கிளிகள் போன்றவற்றின் பின்னங்கால்கள் எம்பி எழப் பயன்படுகின்றன. மார்பின் மேற்புறமாக இறக்கைகள் இல்லை.

பூச்சிகளின் வயிறு தொடர் வளையங்களாக அமைந்திருக்கும். அவற்றின் எண்ணிக்கை பத்தாகும். இவ்வளையங்கள் முட்டையிடும் அமைப்பாகவும் தற்காப்புக்காகக் கொட்டவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிகளின் மூச்சுக் குழல் நீண்ட குழாயாக மேல் ஓட்டின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. பெரும்பாலான பூச்சிகள் முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன.

பூச்சிகளில் பல தனியாகவும் சில கூட்டாகவும் வாழ்கின்றன. எறும்பும் தேனீயும் கூட்டமாக வாழ்வனவாகும். பூச்சி இனங்களிலேயே அறிவாற்றல் மிக்கவை எறும்புகளேயாகும்.

மனிதர்களிடையே நோயைப் பரப்புவதில் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கொசு போன்றவற்றால் மலேரியா போன்ற நோய்கள் உண்டாகின்றன. ஈ போன்றவைகளால் காலரா, வாந்திபேதி போன்ற தொற்று நோய்கள் எளிதாகப் பரவுகின்றன. மற்றும் சிலவகைப் பூச்சிகள் பயிர்ப்பச்சைகளை நாசமாக்குகின்றன. எனவே, இத்தகைய பூச்சிகளை அழிக்க வேண்டிய அவசியமேற்படுகிறது. இதற்கான பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொண்டு இவை அடிக்கடி அழிக்கப்படுகின்றன.


பூமி : நில உலகாகிய பூமி ஒரு கிரகமாகும் இது சூரியனைச் சுற்றிவரும் ஒன்பது கிரகங்களுள் ஒன்றாகும். சூரியனிலிருந்து பூமி சுமார் பதினைந்து கோடி கி.மீ. நெடுந்தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியனிலிருந்து தெறித்து விழுந்து குளிர்ந்த பகுதியே பூமியாகும்.

பூமியின் வடிவம் மேல் முனையும் கீழ் முனையும் சற்று ஒடுங்கிய ஆப்பிள் பழத்தைப் போன்று உருண்டை வடிவுடையதாகும். பூமி தனது அச்சில் தானாகச் சுழல்கிறது. இவ்வாறு பூமி தனக்குத்தானே சுற்றுக் கொள்ள 25 மணிகள் 56 நிமிடங்கள் 4.095 விநாடிகள் பிடிக்கிறது. இச்சுழற்சியோடு சூரியனையும் பூமி சுற்றி வருகிறது. இவ்வாறு சூரியனை ஒரு முறை சுற்றிவர பூமிக்கு ஓராண்டு பிடிக்கிறது. பூமி பம்பரம் போன்று நேராகச் சுழல்வதில்லை.28½0 சாய்வாகச் சுழல்கிறது. இதனாலேயே நான்கு பருவகாலங்கள் மாறி மாறி வருகின்றன. பூமியின் விட்டம் 12,880 கி.மீ ஆகும்.

பூமியின் மேற்பரப்பு மூன்று பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. அதாவது உலகின் மேற்பரப்பில் நீர் அளவு 70%, நிலப்பகுதி 30% ஆகும். உலகின் நிலப்பரப்பு ஏழு கண்டப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஆசியா, ஆஃப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா. ஆஸ்திரேலியா, அண்டார்க்டிக்கா ஆகியனவாகும்.

பூமியின் மேற்பகுதியில் தரைப் பகுதியி லிருந்து சுமார் 960 கி.மீ. தூரம் உயரம்வரை வாயு மண்டலம் அமைந்துள்ளது. இவ்வாயு மனிதர்களும் பிற உயிரினங்களும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான காற்றைத் தந்து உதவுகிறது. அத்துடன் சூரியனிலிருந்து வரும் கடும் வெப்பக் கதிர்களின் வெப்பத்தைக் குறைக்கிறது. புற ஊதாக் கதிர்கள் வாயு மண்டலம் வழி வருவதால் அவற்றால் நமக்கு ஏற்படக்கூடிய தீங்கின் கடுமை வெகுவாகக் குறைகிறது. நிலத்தை நோக்கி வரும் எரி நட்சத்திரங்களை காற்று உராய்வினால் தேய்மானம் அடையச் செய்து நம்மைக் காக்கிறது.

பூமியின் மேற்பகுதி 'புறணி' என்று அழைக்கப்படுகிறது. இஃது 80 கி.மீ. கனமுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மண், பாறைத் துண்டுகளான பகுதி இதற்குக் கீழேயுள்ள பகுதி கடினப் பாறைப் பகுதியாகும். இந்த இரண்டாம் பகுதி 2,800 கி.மீ. கனமுடையதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கும் கீழாக இரும்பு, நிக்கல் போன்ற கடின உலோகப் பொருட்களைக் கொண்ட பகுதி அமைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பு கற்பனைக் கோடுகளால் அளவிடப்பட்டுள்ளது. வட, தென்