பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்துவான் லோரான் லாவாசியர்

21

இவர் 1748ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் தாட்டின் தலைநகரான பாரிஸில் பிறந்தார். வேதியியல் வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியவர்.

அந்துவான் லோாான் லாவாசியர்

இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற துறைகளைவிட மிகவும் பின் தங்கியிருந்த

அரச ஆய்வுக்கூடத்தில் லாவாசியர்

வேதியல் துறையை மிகப்பெரும் வளர்ச்சியடைய வழியமைத்தவர். வேதியல் கண்டுபிடிப்புகள் பலவற்றையும் உலகுக்குக் கண்டறிந்து கூறியவர்.

எரியும் பொருளும் ஆக்சிஜனும் இணைவதால் ஏற்படும் வேதியியல் கலப்பே எரிவதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தார். ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்து உருவாகும் கூட்டுப்பொருள்தான் நீர் என்பதை ஆய்வு பூர்வமாக நிறுவினார். அதே போன்று ஆக்சிஜன் வாயுவும் நைட்ரஜன் வாயுவும் இணைந்த ஒன்றே காற்று என்பது இவரது கண்டுபிடிப்பே யாகும்.

இவர் காலம்வரை நீரும் காற்றும் தனிமங்களாகவே கருதப்பட்டு வந்தன. லாவாசியர் தன் ஆராய்ச்சி மூலம் அவை தனிமங்கள் அல்ல என்பதை நிரூபித்தார். அதோடு அமையாது, எவை எவை தனிமம் என்பதற்கான பட்டியலையும் தயாரித்து உலகுக்கு வழங்கினார். அதுவே இன்றுவரை ஆதாரபூர்வமான பட்டியலாகவும் இருந்து வருகிறது.

அதுவரை வேதியியல் துறைக்கான கலைச் சொற்களை அவரவர் போக்கில் பயன்படுத்திவந்தனர். இதனால் பெரும் குழப்பங்கள் நிலவின. அப்போது வழங்கிய கலைச்சொற்களையெல்லாம் திரட்டி முறைப்படுத்தி, பட்டியலிட்டார். பல சொற்களை உரிய