பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்வில் ரைட் (வில்பர் ரைட்)

47

வெளியேறிய நீரின் எடையை அளந்துகொண்டார். கிரீடம் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் இரண்டு எடை அளவும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லை. இதிலிருந்து கிரீடம் சுத்தத் தங்கத்தில் செய்யப்படவில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்த ஆய்வின் மூலம் ஆர்க்கிமிடீஸ் அறிவியல் உண்மையை உலகுக்கு வெளியிட்டார். இது 'ஆர்க்கிமிடீசின் தத்துவம்’ என அழைக்கப்படுகிறது.

இதை அவர் குளிக்கும்போது கண்டுபிடித்தார். தான் ஆடையின்றிக் குளிப்பதையும் மறந்து, மகிழ்ச்சிப் பெருக்கில் 'யுரேக்கா யுரேக்கா' (கண்டுபிடித்து விட்டேன்! கண்டு பிடித்து விட்டேன்) எனக் கத்திக் கொண்டு தெருவில் ஓடியதாகக் கூறப்படுவதுண்டு.

“ஒரு திடப்பொருள் காற்றிலிருக்கும்போது உள்ள எடையைவிட திரவத்தில் இருக்கும் போது எடை குறைவாக இருக்கும். இந்த இருவித எடைகளுக்கிடையேயான வேறுபாடு திடப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத் திற்குச் சமமாகும்“ என்பதே தத்துவம்.

ஆர்க்கிமிடீஸ் மாபெரும் கணித வல்லுநராகவும் விளங்கியவர். இருபதாம் நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த கணித உண்மைகளின் அடிப்படைகளை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே கண்டறிந்து கூறியவர். கணிதத் தொடர்பான உருளை, கோளம், வட்டம், சுருள் ஆகியவைபற்றிய கணிதக் கோட்பாடுகளையும் வகுத்தளித்துள்ளார்.

ரைட் சகோதரர்கள் செய்த விமானம்

நெம்புகோலைப் பயன்படுத்துவது இவரது காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவந்துள்ளது. எகிப்தியர்கள் நெம்புகோலின்பயன்பாட்டை நன்றாக அறிந்திருந்தனர். எனினும், நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துக் கூறியவர் ஆர்க்கிமிடிசே ஆவார்.

ஆர்வில் ரைட் (வில்பர் ரைட்) : இன்றைய விமான வளர்ச்சிக்கு அன்றே அடித்தளம் அமைத்தவர்கள் ரைட் சகோதரர்கள் ஆவர். ஆர்வில் ரைட் இருவரும் உடன்பிறந்த சகோதிரர்கள். ஆர்வில் ரைட் மூத்த சகோதரர். விமான ஆய்வில் இருவரும் இணைந்தே ஈடுபட்டு வெற்றி கண்டதால் இருவரையும் இணைத்தே கூறுவது வழக்கம்.

ஆர்வில் ரைட் வில்பர் ரைட்

இவர்கட்கு முன் இருந்தவர்கள் காற்றை விடக் கனம் குறைந்த வாயுவை அடைத்து வானில் பறந்து செல்லும் பலூன்கள் மூலம்