பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்பால்ட்

57

சுத் திணறல் ஏற்பட்டால் அது இருதய ஆஸ்துமா (Cardiac Asthma) எனப்படும்.

ஆஸ்துமா ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.மூச்சுக்குழலைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமாகிவிடுவதுண்டு. சில சமயங்களில் மூச்சுக்குழலிலுள்ள சவ்வுகள் வீங்கிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக சளித் தொல்லை ஏற்படும். மேற்கண்டவை ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைவது ஒவ்வாமை (Allergy) ஆகும். காற்றில் பறந்து வரும் தூசி, பஞ்சு ஒட்டடையை சுவாசிக்கும்போதுமூச்சுக் குழலுக்குள் சென்றுவிடும். அத்தூசிகளில் நுண்ணுயிர்கள் கலந்திருப்பதுண்டு. பூக்களில் உள்ள மகரந்தப் பொடிகள் காற்றில் கலந்து சுவாசக்குழலை அடையும். பால், முட்டை, மீன் போன்ற உணவுப் பொருள்களால் ஒவ்வாமை ஏற்படும். அப்போது மூச்சுக்குழல் சுருங்கியோ அல்லது அவற்றின் உள் அளவு குறுகியோ ஆகிவிடுவதுண்டு. ஒவ்வாமையின் விளைவால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் சளியும் நீர்மமும் வெளியேற வழியின்றி துரையீரல் நுண் பைகளில் தங்க நேர்கின்றது. இதனால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு சுவாசத் திறனும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளாக நேரிடுகின்றது.

இந்நிலை தொடரும்போது மூச்சுக்குழலில் அதிக அளவில் சளி சுரப்பதால் அங்கு வழக்கமாகச் சுரக்கும் சீதப்படலச் சுரப்பு சிதைக்கப்படுகிறது. நாளடைவில் மூச்சுக்குழல் சீதப்படலச் சுரப்புத்தன்மையை இழந்துவிட நேர்கின்றது. நுரையீரல் நுண் பைகளில் 'ஈசினோ பில்’ எனும் நுண்கிருமிகள் விரைந்து பெருக்கமடைகின்றன. இதனால் நுரையீரல் சுருங்கி விரிவது கடினமாகி விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் கடுமையான மூச்சுத் திணறலால் அவதியுற வேண்டியதாகிறது.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்மை, மூச்சுத்திணறல், ஒருவித விசில் ஓசை, இருமல் தொடர்ந்து வருவது, அபரிமிதமான சளி சுரப்பு போன்ற உபாதைகளால் அவதியுறுவர்.

ஆஸ்துமா எல்லோருக்கும் வரும் என்றாலும் வயது முதிர்ந்த ஆண்பெண் அனைவருக்கும் இந்நோய் வரக்கூடும். அதிலும் அதிகமாக பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவச் சான்று கூறுகிறது.

ஆஸ்துமா நோயை தீவிர ஆஸ்துமா (Acute asthma), நாள்பட்ட ஆஸ்துமா (Chronic asthma) என இருவகையாகப் பிரிப்பர். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா தீவிர ஆஸ்துமாவாக உருவெடுக்கும். நீடித்த நிலையில் அதுவே நாட்பட்ட ஆஸ்துமாவாக ஆகிவிடும்.

மூச்சுக்குழல் ஆஸ்துமா எல்லா நேரங்களிலும் தொடர்ந்து துன்பம் தருவதில்லை. சில மணி நேரங்கள் நீடித்துப் பின் மறைந்துவிடும். இரவிலும் குளிர் காலங்களிலும் மட்டுமே இந் நோய் மிகுந்த துன்பத்தைத் தரும்.

ஒவ்வாமைக் காரணங்களைக் கண்டறிந்து தவிர்ப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம். இதற்காக ஒவ்வாமையைக் கண்டறியும் சோதனைகட்கு உட்பட்டுக் கண்டறியலாம்.

இருதய ஆஸ்துமா உயிருக்கு ஆபத்தைத் தரக்கூடியது. ஆரம்ப கட்டத்திலிருந்தே அதைக் கண்காணித்து தேவையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம். தவறினால் இதயம் வீங்கி, அதன் செயல்பாட்டில் தளர்ச்சி உண்டாகி மரணம் ஏற்படலாம்.

ஆஸ்துமாவின் தன்மைக்கேற்ப மருந்தும் மருத்துவமும் அமையும்.

ஆஸ்பால்ட் : நாம் 'தார்’ என்று அழைக்கும் பொருள் 'ஆஸ்பால்ட்' என்று கூறப்படுகிறது. இது இயற்கையாகக் கிடைக்கும் ஒருவகை தாது ஆகும். இது கறுப்பாகவோ அல்லது கரும்பழுப்பு நிறமாகவோ கிடைக்கிறது. உலகிலேயே மிக அதிகமாக ஆஸ்பால்ட் கிடைக்குமிடம் மேற்கு இந்தியத் தீவிலுள்ள டிரினிடாட் ஆகும். இங்கு 285அடி ஆழத்தில் 100 ஏக்கர் பரப்பில் கிடைக்கிறது,

செயற்கை முறையிலும் ஆஸ்பால்டைப் பெறமுடியும், பெட்ரோலிய கச்சாப்பொருளை காய்ச்சி வடிக்கும்போது அடியில் படியும் பொருளாக ஆஸ்பால்ட் கிடைக்கிறது. இது பெட்ரோலிய உப பொருளாகும்.

பெரும்பாலும் சாலைச் சீரமைப்பிற்கு ஆஸ்பால்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். சிறு சரளைக்கற்களுடன் 12:1 என்ற விகிதத்தில் 2000 வெப்பத்தில் கலந்து சாலையில் நிரவி