பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்த அழுத்தம்

65

யணுக்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு அளவுக்கதிகமாக உற்பத்தியாகிவிடும் வெள்ளையணுக்களும் எலும்பிலுள்ள மஜ்ஜையிலிருந்தே உற்பத்தியாகி இரத்தத்தில் ஊடுருவுகின்றன. நோயின்போது இல்வுற்பத்திப் பாதிக்கப்படுகிறது. இதனால் நோய்க்கிருமிகள் எளிதாக உடலைப் பாதிக் கின்றன.

தட்டயம்கள்

நமக்கு எப்போதாவது ஏதாவது சிறுகாயம் ஏற்பட்டால் இரத்தம் வெளிவருகிறது. ஆனால் சிறிது நேரத்தில் இரத்தம் வெளியாவது நின்று விடுகிறது. இவ்வாறு இரத்தம் தொடர்ந்து வடிந்துவிடாமல் தடுத்துக் காப்பவை நுண் தட்டுகள் என கூறப்படும் தட்டயம்களேயாகும். சிறுகாயம் ஏற்படும்போது பல தட்டயம்கள் ஒன்று சேர்கின்றன. அப்போது பிராணவாயு அவற்றிலிருந்து ஒரு புதுப் பொருளை உருவாக்கி பிளாஸ்மாவுடன் கலக்கிறது. இது காயத்தின் மீது உறைபடலம் போல் படிய இரத்தப்போக்கு நின்று விடுகிறது. சிறுகாயங்களில் இவ்வாறு இரத்தக் கசிவு தடுக்கப்படுமே தவிர பெரிய இரத்தக் குழாய் உடைப்பால் ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்த இவற்றால் இயலாது.

இவையும் எலும்பு மஜ்ஜைகளிலிருந்தே உருவாகி இரத்தத்தை வந்தடைகின்றன. ஒரு கன மீட்டர் இரத்தத்தில் 2.5, இலட்சம் தட்டயம்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றின் வாழ்நாள் சுமார் பத்து நாட்களாகும். இவையும் மண்ணீரல் சென்று அழிகின்றன.

இரத்த அழுத்தம் : இதயம் இரத்த நாளங்களுக்கு இரத்தத்தை அனுப்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தத்தைக் கொடுப்புதால்தான். இரத்தம் ஒரே சீராக உடலெங்கும் பாய்ந்து பரவுகிறது. இந்த அழுத்தம்தான் ‘இரத்த அழுத்தம்’ (Blood Pressure) எனக் கூறப்படுகிறது.

இதில் இரு பிரிவுகள் உண்டு.

இதயம், இரத்த நாளத்தினுள் இரத்தத்தை செலுத்துவதற்குக்கொடுக்கிற அழுத்தம்-அதாவது இதயம் சுருங்கும்போது உண்டாகிற அழுத்தம்-'சிஸ்டாலிக் அழுத்தம்’ (Systolic Pressure) எனப்படுகிறது. இரத்தக் குழாய்களில் இரத்தம் தங்குவதற்குக் கொடுக்கப்படும் அழுத்தம்-அதாவது இதயம் விரியும்போது உண்டாகிற அழுத்தம்-'டயஸ்டாலிக் அழுத்தம்’ (Diastolic Pressure) எனப்படுகிறது. இதை முறையே சுருக்கழுத்தம், விரிவழுத்தம் எனத் தமிழில் சொல்லலாம். ஒரு சராசரி மனிதனுக்குச் சுருக்கழுத்தம் 120 மி.மீ. பாதரச அளவாகவும், விரிவழுத்தம் 80 மி.மீ. பாதரச அளவாகவும் இருக்க வேண்டும், வயதானவர்களுக்கு இது 140/90 மி.மீ. பாதரச அளவாக இருக்கும்.

இரத்த அழுத்தம் 140/90 மி.மீ. பாதரச அளவைத் தாண்டும் நிலையை இரத்தக் கொதிப்பு, உயர் இரத்த அழுத்தம்,இரத்த மிகு அழுத்தம் (Hypertension) எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். இது பெரும்பாலும் 40 வயதிற்கு மேல் வரக்கூடிய நோய். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 80 விழுக்காட்டினருக்குக் காரணமே தெரிவதில்லை. மீதி 20 விழுக்காட்டினருக்கு சிறுநீரகக் கோளாறுகள், நாளமில்லா சுரப்பி நோய்கள், அட்ரீனல் சுரப்பி நோய்கள், பிட்யூட்டரி சுரப்பி நோய்கள். மூளைத் தண்டுவட நோய்கள், உள் கபால அழுத்த அதிகரிப்பு, பெருந்தமனி குறுகலடைந்துபோவது போன்ற காரணங்களினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் உடல்நலனுக்கு ஆபத்து தரக்கூடியது. இதனால் பக்கவாதம், பார்வைக் குறைவு, மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு, மூளைக்குள் இரத்தக் கசிவு, மூளை இரத்தக் குழாய்கள் வெடித்துவிடுவது போன்ற ஆபத்தான பின்விளைவுகள் உண்டாகலாம்.

இரத்த அழுத்தம் எந்த அளவு உள்ளது என்பதை அளந்து காண்பதற்கு ஒரு கருவி உண்டு. அதை இரத்தக்குழாய் அழுத்த மானி’ (Sphygmomanometer) என்று அழைப்பார்கள். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளைப் பரிசோதித்தும் இரத்தம், சிறுநீர் ஆகியவற்றை