பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உணவுப் பாதை

77

முண்டம், கைகால்கள் ஆகியவையே அவை. உடலின் சில முக்கிய உறுப்புகள் இரண்டிரண்டாக அமைந்துள்ளன. இரு கண்கள், இரு காதுகள், இரண்டு பிரிவாக அமைந்த நுரையீரல், இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவைகளே அவைகள். அவற்றுள்

உடலமைப்பு

தலையே தலையாய பகுதியாக அமைந்துள்ளது. "எண் சாண் உடலுக்குத் தலையே முக்கியம்’ என்பது பழமொழியாகும். உடல் இயக்கத்துக்கு மூலாதாரமான மூளையும் புலனுறுப்புகளான கண், காது, மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் அனைத்தும் தலையிலேயே அமைந் துள்ளன.

கழுத்துக்குக் கீழாக இடுப்புக்கு மேலாக சீரணமண்டலம் அமைந்துள்ளது. இங்குகுதான் நாம் உண்ணும் உணவு சீரணிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது. இச்சக்தியே உடல் இயங்குவதற்கான ஆற்றலைத் தருகிறது. கை கால்கள் மட்டுமல்லாது உடல் முழுவதையும் காக்கும் கேடயமாக எலும்புகள் அமைந்துள்ளன. மனித எலும்புக் கூட்டை உடலின் சட்டகம் என்றே கூறிவிடலாம். இவை மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளைக் காப்பதோடு உடலுக்கான வடிவத்தையும் ஏற்படுத்த எலும்புகள் உதவுகின்றன.

எலும்புகள் உடலுக்கான வடிவத்தை வழங்க உதவுவது போன்று உடல் அழகான தோற்றத்தைப் பெற தசைகள் பேருதவி புரிகின்றன. எலும்பை இறுக்கமாகப் பற்றி அவற்றுக்குப் பாதுகாப்பையும் தருகிறது. தசைகள் சுருங்கி விரியும் தன்மையுடையனவாக இருப்பதால் நம் உடல் உறுப்புகளை விரும்பிய வண்ணம் அசைக்க இயலுகிறது. சில பகுதிகளில் உள்ள தசைகள் எலும்போடு சிறிதும்ஒட்டாமல் அமைந்துள்ளன. இதயம், இரைப்பை போன்ற உடல் உறுப்புகள் எலும்போடு இணையாமல் தனித்தே அமைந்துள்ளன. மூட்டுகள் மூலம் எலும்புகள் இயங்குகின்றன.

அடுத்து உடலின் முக்கியத்துவமுள்ள பகுதி நரம்பு மண்டலமாகும். உடல் உறுப்புகள் அனைத்தும் செவ்வனே இயங்க நரம்புகள் பெருந்துணைபுரிகின்றன. அவ்வாறே தோலும் உடலைப் பாதுகாக்கும் போர்வையாக அமைந்துள்ளன. வியர்வை போன்ற கழிவுகள் வெளியேற தோலே ஆதாரமாக அமைந்துள்ளது.

உணவுப் பாதை : மனித உடலின் உணவுப் பாதை வாய்தொடங்கி மலம் வெளியேறும் ஆசனவாய் வரை அமைந்துள்ளது. உணவுப் பொருள்களை பற்களால் மென்று அரைக்கவும் அதற்கேற்ப அவற்றைப் பற்களுக்குத் தள்ளியுதவ நாக்கும் அமைந்துள்ளன. வாயில் இடப்பட்ட உணவை பற்கள் அரைக்கும் போது அதனை கூழாக்கும் வகையில் மூன்று இணை சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் சுரந்து வெளிப்படுகிறது. அவை உணவுடன் நன்கு கலந்து உணவு கரைக்கப்படுகிறது. உமிழ்நீர் சேர்க்கையின் மூலம் இங்கு ஓரளவு உணவு (ஸ்டார்ச்சு) சர்க்கரையாக மாற்றமுடிகிறது.

நன்கு மென்று விழுங்கும் உணவு தொண்டை வழியாக இறங்கி இரைப்பையை