பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்


லுஞ் சரிதான். இப் பாதகன் இருக்குமிடத்தை நீங்கிக் கண்ணைவிட்டு மறைந்தால் போதுமென்று இருந்தது.

நான் ஒடும்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே தான் சென்றேன். இவ்வாறு ஐந்தாறு நிமிடங்கள் ஓடியிருப்பேன். என் எதிரே குதிரையின் காலடி யோசை வருவது கேட்டுத் திடுக்கிட்டு ஒதுங்கி நின்றேன்.