பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 113.

உமது நண்பரா என்ன?....................” என்று வியப்பாகக் கேட்டார். - -

எனக்கு ஆவலும் ஆச்சரியமுங் காங்க முடியவில்லை. இனி, மறைந்திருக்க விரும்பாமையால், கதவைத் திறந்து கொண்டு இவ் வறையுள் நுழைந்து என் தந்தையின் பின்னே நின்று அங்கு நடப்பதை கவனிக்கலானேன்.

ஆலால சுந்தர முதலியார் என் தந்தையின் கேள்விக் குப் பதிலாக, 'இவரைத் தெரியாதவர்கள் கூட உலகத்தி லிருக்கிருர்களா என்ன? நீங்கள் கேட்குங் தோரணையைப் பார்த்தால், இவரை இதற்குமுன் உங்களுக்குப் பழக்க மில்லையென்று தெரிகிறது. இது ஒரு பெரிய ஆச்சரியந்தான். உலகாதிசயங்களி லொன்றென்றே இதைச் சொல்லவேண் டும். ஏனென்ருல், இத்துணை பெரிய சீமாளுகிய நீங்கள் இவ்வளவு நாட்களாக இவரது தரிசனத்தைப் பெருதது உங்களுடைய புண்ணியமோ! அவரது துரதிர்ஷ்டமோ!இல்லையில்ல்ே; வாய் தவறிக் கூறிவிட்டேன்-உங்களுடைய துரதிர்ஷ்டக்கான். # * * * * * * * ’ என்று அவ் ஏஜண்டைக் கடைக்கணித்துக்கொண்டே கூறினர்.

எனக்கு சிரிப்புக் தாங்கவில்லை. களுக்கென்று ஈகைத்துவிட்டேன், பாவம்! அந்த மனிதரது கிலே முன் னிலையிலும் மோசமாய்விட்டது. முகம் சுருங்கிவிட்டது. தலையைத் தொங்கப்போட்டுவிட்டார். அதிகாலையில் தன் முயற்சி பலிக்காது போனதால் ஏற்பட்ட ஏமாற்றம்தான் குறிவைத்த 'மனிதரின் மனக்குறிப்பறியாது பேசி அவர் கோபத்துக் காளான அவமானம்-தன் குட்டு களெல்லாங் த்ெரிந்த ஒருவரின் பரிகாசப்பேச்சு..இவை யெல் ல்ாம் ஒன்றுசேர்ந்து அவரது எண்சாண் உடம்பும் ஒரு சாளுகி அவர்ை கில்ே குலையச் செய்துவிட்டது. இவ்வளவு