பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹிளாதேவி கலாசாலே மர்மம் 129,

கொட்டை எழுத்துக்களால் இச் செய்தி பின்வருமாறு: வெளியிடப்பட்டிருந்தது.

'காலேஜ் பிரின்ஸிபால் மோசடி

புருஷனும் மனைவியும் கைதியாயினர்

கலாசாலைக் கட்டிடம் சீல் வைக்கப்பட்டது (நமது கிருபர்)

செப். 18வ. 'இன்று காலே குற்ற இலாகா போலிஸார் இந்நகரில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த மஹிளாதேவி டியூடோ ரியல் காலேஜ்' பிரின்ஸிபால் மஹிளாேதவியையும், அவரது - கணவனென்று கூறப்பட்ட மனிதரையும், மோசடிக் குற். றத்துக்காக கைது செய்தனர். அதோடு கலாசாலைக் கட் டிடமுஞ் சில் வைக்கப்பட்டுப் போலீஸார் மேற் பார்வை

யில் இருந்து வருகிறது. -

- இச்சம்பவத்தைப்பற்றிக் தீவிரமாக விசாரணை செய் ததில், இவ்விருவரும் கைது செய்யப்படுவதற்குக் காரண மாயிருந்தது, மஹிளாதேவி பர்மாவிலுள்ள தன் தாய்க்கு எழுதிய கடிதமே யென்றும், அக்கடிதம் தபால் இலாகா அதிகாரிகளால் சந்தேகங் காரணமாகப் பிரித்துப் பார்க்கப் பட்டதென்றும், அதிலுள்ள விஷயம் விபரீதமா யிருந்த தால், இது போலீஸ் கமிஷனர் பார்வைக்கு அனுப்பப் பட்டதென்றும், அவர்கள் அதைப் பரிசீலனை செய்து உடனே, நட்வடிக்கை யெடுத்துக்கொண்டு, இவ்விருவரை யும் கைதுசெய்திருக்கிருர்களென்றும் தெரிகிறது. அக்கடி