பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் என்ருல் என்ன பூதமா? பேயா? 203

“என்ன என்னேக் காதலிக்கிறீரா? அப்படி யென்ருல் என்ன அர்த்தம்' என்று அறியாமையோடு கேட்டேன்.

"நான் உன்மீது காதல்கொண்டிருக்கிறேன். அது பல நாட்களாக நத்தைபோல் என் மனதில் ஊர்ந்து வளர்ந்து சில நாட்களாக என்னேக் கவிந்துகொண்டிருக்கிறது.”

'இதென்ன காதல்! இந்தக் காதல் என்ற வார்த்தை புத்தகங்களில் அடிக்கடி உபயோகிக்கப்பட்டு வருவதைப் பார்த்திருக்கிறேன்; பலர் கூறவுங் கேட்டிருக்கிறேன். ஆனல் அச்சொல்லுக்கு அர்த்தமென்னவென்று தான் எனக்குத் தெரியவில்லை-மிஸ்டர் நாத் நீர் இப்போது கூறுவது என்னவென்று எனக்கு விளங்கவில்லை. தெளி வாகக் கூறும்” என்று கூறினேன். -

சத்தியசாகர் ஆச்சரியத்தோடு, காதல் என்ற வார்த் தைக்கு அர்த்தங் தெரியாதா?-சரி நான் உன்னிடம் அன்புகொண்டிருக்கிறேன். நீயும் என்பால் அன்புகொள்ள வேண்டு மென்று கேட்டுக்கொள்ளுகிறேன்,” என்று சொன்னர்.

கான் உம்மிடம் அன்பாகத்தானே இருக்கிறேன்? இன்னும் என்ன அன்பு கொள்ளவேண்டும்?'

இந்த அன்புக்கும் சான் வேண்டும் காதலுக்கும் வித்தியாச முண்டு. அதனுல்தான் முதலிலேயே காதல் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினேன்.”

அன்புக்கும் காதலுக்கும் என்ன வேற்றுமை'

'அன்பு என்பது ஏதோ ஒரு காரணம் பற்றி உண்டா கும் விசுவாசமாகும். காதல் எக்காரணமுமின்றி ஆண்