பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும் 217.

பவர்கள் எங்கே?' என்று கேட்க வாயெடுத்தேன். இதற் குள் அவர் என் குறிப்பறிந்தவர்போல், அம்மா! நான் தான் இதோ இருக்கிறேன்" என்று மெதுவாகக் கூறினர். அக்குரலேக் கேட்டதும் திரும்பி அவரைக் கூர்ந்து நோக்கி னேன். 'ஆ' என்ன என் தந்தையா? என் அருமைத் தந்தையா? லட்சாதிபதியான என் தந்தையா இவ்வளவு எளிய தோற்றமும், மெலிந்த தேகமு முடையவரா யிருக் கிருர்?' என்ற எண்ணம் என் மனதில் மின்னல் தோன்றி மறைவதுபோல் உதித்து ஒடுங்கியது. திடுக்கிட்டேன். அடுத்தகணம் என் கையிலிருந்த பெட்டி முதலியன வெல் லாம் நழுவி விழுந்தன. அப்பா! நீயா அப்பா இக்கோலத் தில் காணப்படுகிருய்?” என்று கதறியவண்ணம் அவரைக் கட்டிக்கொண்டேன். அவர் கண்களிலும் நீர் தாரை தாரை யாக வடிந்தது. -

என் கூச்சல் கூட்டத்தைச் சேர்த்துவிட்டது. பலர் ாஎன்ன! என்ன நேர்ந்தது?" என்று என் தந்தைய்ைப் பர பரப்புடன் வினவினர். ஒரு சிலர், சீமாட்டி மகள்போல் கர்ணப்படும் இப்பெண் ஒரு பைத்தியக்காரக் கிழவனைக் கட்டிக்கொண்டு அழுகிருளே என்றெண்ணியோ என் னவோ கேலியாகச் சிரித்து கின்றனர். திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் நான் என் தந்தையின் மீதே மூர்ச்சையாய் விட்டேன். . . . . . .

என் தந்தை கேட்டவர்களுக்கு ஏதோ சமாதானஞ் சொல்லிவிட்டு, என்ன ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு: அவ்விடத்தினின்றும் வெளியேறினர். - - -

நான் மூர்ச்சை தெளிந்து நோக்கியபோது ரயிலில் இர்யான்ஞ் செய்து கொண்டிருப்பதர்க அறிந்தேன். பக் கத்தில் அம்ர்ந்திருந்த என் தந்தையைப் பார்த்துப் பல.

15 . -