பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 227

தது சரிதான். இது இயற்கை மரணமாக இருக்க முடி வாது. பிரேத பரிசோதனைக்குப் பிரேதத்தை அனுப்ப வேண்டியதே. அங்கே தெரிந்து போகிறது எல்லாம் வெட்ட வெளிச்சமாக, ஊம், இன்ஸ்பெக்டர் சார்! என்ன யோசிக்கிறீர்?’ என்று சிறிது மிடுக்காகவே கேட்டார். தமது கடமையைச் செய்வதில் சிறிதும் வழுவாதவர் என்ப தைப் பிறர் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது அவரது எண்ணம்போலும். இது அவரது தடபுடலி விருந்து தெரிந்தது. *

போலிஸ் இன்ஸ்பெக்டர், சப் மாஜின்திரேட் முதலிய வர்களேத் தனியாக அழைத்துக்கொண்டு போய் ஏதோ சில விநாடிகள் பேசினர். பின்னர் அவர் எங்களிடம் திரும்பி வருகையில், அவர் வருங் குறிப்பை யறிந்துகொண்டவர் போல் என் சிற்றப்பா எதிர் சென்று வழி மறித்து அவர் முகவாய்க் கட்டையைப் பிடி த்துக்கொண்டு பலவாறு கூறிக்

கெஞ்சலாஞர்.

இதே சமயம் மற்றுஞ் சில கனவான்கள் அங்கே தோன்றினர். அவர்கள் கடன்காரர்கள் என்று பின்னல் எனக்குத் தெரிந்தது. அவர்கள் அச்சமயம் அங்கு வந்த நோக்கம் எதுவோ! ஆயினும், என் சிற்றப்பாவின் தவிப் பைப் பார்த்துவிட்டு இரக்கங் கொண்டவர்களாய், போலிஸ் இன்ஸ்பெக்டர் முதலியவர்களோடு எங்கள் சார் பாக வாதாடினர். சிறிது நேரம் அனைவருங் கலந்தாலோ சித்த பின் ஏதோ முடிவுக்கு வந்தவர்களாய், என் சிற்றப் பாவிடம் பிரேதத்தைச் சீக்கிரம் அடக்கஞ் செய்துவிடு மாறு யோசனை கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.

அப்போதுதான் நான் கொஞ்சங் தைரியமாக மூச்சு விடலானேன். எதிர்பாராதவாறு இவ்வாறு சிக்கிரத்தில்