பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

எங்கள் குடும்பம் சீர் கெட்டழியும் கிலேமைக்கு வந்துவிட்

டதை நினைத்தபோது என் வயிறு குழம்பியது. ஆம்: நான் ஐயுற்றபடியே மானத்துக் கஞ்சி விஷத்தையோ

வேறெதையோ-உண்டு என் தந்தை உயிரைப் போக்கிக்

கொண்டார். அதுதான் உண்மையாக கடந்ததும். இவ் வெண்ணம் உறுதிப்படவே'நான் திடீரென எழுந்து அவ்

வறையை ஆராயலானேன். தலையணையை யெடுத்துப் பார்த்தபொழுது ஒரு சிறு காகிதம் மடிக்கப்பட்டுக் கிடக்

தது. அதை ஆவலாக எடுத்துப் பார்த்தேன். என் கை நடுங்கியது. அதில் பின் வருமாறு என் தந்தையால் எழு

தப்பட்டிருந்தது:-என் அருமைப் புதல்விக்கு,

உனக்காகவே உயிரை வைத்திருந்தேன். நான் இதற்கு முன், என் உயிரினும் சிறந்த உன்னைக் கண் குளிரப்பார்த்து விட வேண்டுமென்ற ஆசை நிறைவேறிவிட்டது. இனி, எனக்கு இவ்வுலகில் வேலையில்லே. நான் அரும்பாடுபட்டுக் தேடிய செல்வமும், சீரும், குடும்பப் பெருமையும் எவ் வாருே அழிந்துவிட்டன. அதுபற்றி நான் யாரையுங் குறை கூற விரு.பவில்லை. மான மழிந்த பின்னும் உயிர் வாழ இச்சை கொள்வது மிகக் கேவலமானதாகு . இப் பாழும் உலகத்தில் நீ யாரையுஞ் சகமென்று நம்பாதே! கல்வியறிவு இருப்பினும் உலகானுபவமற்ற உன்னைச் சகல. புவனங்களுக்குக் தாயுந் தந்தையுமான முழு முதற் கடவு. ளிடமே அடைக்கலப் படுத்திவிட்டுச் செல்கிறேன். எதை முன்னிட்டும் உன் அருமைத் தாயை மட்டும் கை நெகிழ் விடாதே, - -

என் இன்னுயிரை உன்னிடம் வைத்துவிட்டுச் செல்லும்,

உன் தந்தை.