பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கொள்ளக்கூடாதா? உன் மனதிலேயே வைத்துக்கொண்டு சங்கடப்படுவதைக் காட்டிலும், என்னிடத்தில் சொன்னல் ஆறுதல் ஏற்படாதா? அவ்வளவு இரகசியமா அது?" என்று சிறிது கோபத்தோடும் ஆனல் அழுகைக் குர்லிலுங் கேட்டேன். -

எனது உணர்ச்சி தீவிரத்தைக் கண்டோ என்னவோ என் தாய் என்னே அப்படியே வாரியனைத்து முகத்தோடு முகத்தைப் பொருத்தி, என் கலிதீர்க்க வந்த கண்ணே புவன உன்னிடமும் ஒளிக்கக்கூடிய தொன்று இருக் கிறதா விஷயத்தைச் சொன்னல் உன் மனம் வருந்துமே என்ற எண்ணமே யொழிய வேறல்ல....நீ இவ்வளவு தூரம் வற்புறுத்திக் கேட்பதல்ை சொல்லுகிறேன். ஆனல், இவ் விஷ்யத்தை உன் தந்தையிடம் எப்போதும் வாய் தவறியும் சொல்லிவிடாதே தெரியுமா!

நான் உன் தந்தைக்கு வாழ்க்கைப்பட்டு நீண்டநாளா கியும் பிள்ளைப் பேறு வாய்க்காமல் மனம் வருந்திவந்தேன். இந்நிலையில், உனது சிறிய தந்தைக்கு விவாக ஏற்பாடு நடைபெற்றது. வெளியே எங்கெங்கோ பெண் பார்த்தார் கள். நான் பலவித செளகரியங்களே உத்தேசித்து என் தங் கையையே மணஞ் செய்துகொள்ள வேண்டுமென்று பிடி வாதஞ் செய்தேன். ஆகவே, முடிவில், என் விருப்பப்படி திருமணம் நடைபெற்றது. என் தங்கை என்ளுேடு முதலில் அன்பும் பணிவுங் காட்டியே கடந்து வந்தாள். அவளுக்கு விவாகமான ஒரு வருஷத்திற்கெல்லாம் அவள் ஒர் ஆண் குழந்தையைப் பெற்ருள். பிள்ளையில்லாத விட் டி ல் குழந்தை பிறந்ததைப்பற்றிப் பொதுவாக காங்கள் எல். லோரும் மகிழ்ச்சி கொண்டாடினேம். நான் அக் குழக் தையை என் பிள்ளையைப்போலவே சீராட்டிப் பாராட்டி