பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கவலை யெடுத்துக்கொள்ளாதிருத்த அவர், இப்போது தன் கவனத்தைத் திருப்பலானர். என் உடல் நலத்தில் மிகவுங் கண்ணுங் கருத்துமாயிருந்தார். ஆனல், நானே இப்போ தும் என் தங்கை குழந்தைகள் விஷயத்தில் முன்போலவே அன்பாக இருக்து வந்தேன். அப்படி யிருந்தும் கான் கர்ப்பமுற்ற செய்தி யறிந்த பின்னர், என் தங்கை எக்கார ணத்தாலோ முகவாட்ட முற்றிருந்தாள். என்னிடம் முன் போல அளவளாவிப் பேசுவதில்லே. அவள் இவ்வாறு இருப்பதற்குக் காரண மென்னவென்று தெரியவில்லை; நான் அதை அறிந்துகொள்ளவும் முயலவில்லை. அவள் வருத்தங் கொள்வதற்குரிய விஷயம் எதாகிலும் இருக்கலாம்; அவ. ளது தனிப்பட்ட விஷயத்தில் நாம் தலையிடுவானேன் என்று வாளாவிருந்தேன்.

பத்து மாதமும் பூரணமாயிற்று. பிரசவத்தை ஒவ் வெர்ரு கணமும் யாவரும் எதிர்பார்த்திருந்தனர். உன் தந்தை ஒரு லேடி டாக்டரையும் இரு கர்ஸ்-க்ளேயும் தரு வித்து பிரசவம் முடியும்வரை இருக்கும்படி ஏற்பாடு செய்து விட்டார். நீண்ட நாளிருந்து கருப்ப முற்றிருப்பதால் மிக வும் எச்சரிக்கையாக இருக்கவேண்டி யிருந்தது. பிரசவக் குறிகளும் பயங்கரமாய் இருந்தன. ஒரு நாள் எனக்குப் பிரசவ வேதனே யேற்பட்டது. யாவரும் ஆவலோடு என் னேச் சூழ்ந்து கின்று, அச்சமயம் எனக்குக் தேவையான உதவிகளைச் செய்ய ஆயத்தமாயினர். ஆனல் இவ்வளவுக் கும் என் தங்கை மட்டும் சர்வ சாதாரணமாகவே இருந்து வந்தாள். வெளியார் காட்டும் சிரத்தைகூட இவளுக்கு இல்லாததை யறிந்து எனக்கு ஆச்சரியமாகவே இருக்கது. பிரசவ வேதனை நெருங்கியது. என் அறையில் என் தங்கையும், லேடி டாக்டரும், இரு சர்ஸுகளும் மட்டுமே