பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்த மகளிரின் விபரீதப் போக்கு

83


மிஸ். மார்கரெட்: — நம் சிநேகிதைகள் முதலியோரிடமும் இக்கொள்கையைப் பரவச் செய்யவேண்டும்.


ஸ்வர்ணகுமாரி: -அடி! அடி! இதோ பாருங்களடி! உங்கள் பேச்சை நிறுத்தங்களடி! நீங்கள் இவ்வளவு தூரம் தீவிரமாகப் பேசி ஆண்கள் உலகத்தையே எரித்துச் சாம்பலாக்கிவிடத் தீர்மானித்ததும், அதோ இருக்கும் அப்பயல்கள் உங்கள் பாதங்களின் அடியில் விழுந்து கெஞ்சப் போவதாகத் தெரியவில்லையே! உங்களை யெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு அவர்கள் அத்தனைபேரும், பாவம் தெய்வமே யென்று பேசாமலிருக்கும் புவனாவையன்றோ கண் கொட்டாது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? இதைக் கண்டு உங்களுக்குச் சிறிதும் வெட்க மில்லையா?