பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11




அணிந்துரை

‘இஸ்லாம் மதத்தைப் பற்றி பலர் நினைப்பது, அம்மதம் மற்ற மதங்களை உண்மையானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை; மற்ற மதங்களுக்கு இஸ்லாம் எதிரி; மற்ற மதத்தினரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவதே இஸ்லாமியரின் அடிப்படைக் கொள்கை; அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வன்முறைகளையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை’. இம்மாதிரியான கருத்துகளெல்லாம் இஸ்லாமிய மதத்தின் உண்மைத்தத்துவங்களை உணராதவர்கள் சில காலங்களிலே, சில இடங்களிலே நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இக் கருத்துகள் உருவாகியிருக்கின்றன என்பது திரு மணவை முஸ்தபா அவர்கள் இயற்றியுள்ள “இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்” என்ற நூலினுள் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் கருத்துகள். அதற்கு குர்ஆனிலிருந்து தக்க ஆதாரங்களை எடுத்து விளக்கியிருக்கிறார். முஹம்மது நபிகளார் தனது சிஷ்யர்களுக்கும் தன்னைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் விளக்கியுள்ள புத்திமதிகளையும் சான்றாக இந்நூலில் விரிவாகக் காட்டியுள்ளார்.

உண்மையான முஸ்லிம் யார் என்பதை நபிகள் நாயகம் விளக்கியுள்ளதை இங்கு எடுத்துக்காட்டுவது சாலவும் சிறந்ததாகும். இந்நூலின் 12-13 பக்கங்களில் நூலாசிரியர் இதை எடுத்துக் கூறியிருக்கிறார்:

“முஸ்லிம் ஒருவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களை மட்டும் இறைதூதராக, இஸ்லாமிய மார்க்க வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு விட்டால் மட்டும் அவர் ஒரு முழுமையான முஸ்லிம் ஆகிவிட முடியாது. அவ்வாறு கருதுவதும் இஸ்லாமிய மரபு அன்று.