பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53



இன்ஜில் எனும் விவிலியம் கூறும் ஏகத்துவம்

இயேசு என அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பற்றிக் கூறிய கருத்துகள் விவிலிய நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன.

பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செயல்படுகிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பவனேயல்லாமல், என்னை (இயேசுவை) நோக்கி, “கர்த்தரே கர்த்தரே! என்று சொல்கின்றவன் அதில் பிரவேசிப்பதில்லை." (மத்தேயு 7:21)

இதிலிருந்து ஏகப் பரம்பொருளைத் தவிர வேறு யாரையும் ‘இறைவன்’ எனக் குறிப்பிடுவதை இறைதூதரான ஈஸா (அலை) அவர்கள் அறவே விரும்பவில்லை என்பதை அறிந்துணர முடிகிறது. மேலும்,

“பூமியிலே ஒருவரையும் உங்கள் பிதா என்று சொல்லா திருங்கள்; பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக (இறைவனாக) இருக்கிறார்”.

(மத்தேயு 23:9)

இயேசுவை நோக்கி, மறைநூல் வல்லார் ஒருவர், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு,

“நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவு ளிடம் அன்பு கூர்வாயாக” என்பதுதான் முதல் கட்டளை என்றார். அதற்கு மறைவல்லார்,

"கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று நீர் கூறியது உண்மையே”.

(மாற்கு 12:29, 30.32)