பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

இறைவணக்க உயிரோட்டம் தியாகமே

இஸ்லாமிய இறைவணக்க முறைகளின் உயிரோட்டமாக அமைந்திருப்பது தியாக உணர்வாகும். ஆழ்ந்து பார்த்தால் இஸ்லாமியக் கடமைகள் அனைத்துமே தியாகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பது தெள்ளத் தெளிவாகும். சான்றாக 'ஈமான்' -ஐ எடுத்துக்கொள்வோம். மனம் ஒரு குரங்கு என்பார்கள். நல்லதோ கெட்டதோ தனக்கு இதமாக இருக்கும் எதையும், மகிழ்வூட்டக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் பற்றி பூரிப்படைவது மனதிற்குகந்த ஒன்று. ஆனால், அசையோட்ட மிக்க மனதை ஒரு நிலைப்படுத்தி, அதிலே இறையுணர்வைப் பொங்கச் செய்து, இறைவன் ஒருவனே, அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை; அலியுமில்லை. அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை என்பதில் முழுமையாக நம்பிக்கை கொண்டு, இவ்விறை உணர்வால் மனதை நிரப்பிக் கொள்ளும்போது, இஷ்டப்படியெல்லாம் எண்ணி மகிழும் மனதைக் கட்டுப்படுத்தும் தியாகத்தை செய்தவர்களாகிறோம்.

அடுத்து, 'தொழுகை' வைகறை நேரம். விடிந்தும் விடியாத நிலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாகத் தூங்கும் நேரத்தில் துள்ளியெழுந்து, உள்ளச் சுத்தம், உடல் சுத்தம் என்ற நிலையில் ஒளுச் செய்து வைகறைத் தொழுகையான 'பஜ்ர்' தொழுகையில் தொழுகையாளி ஈடுபடுகிறார். இதேபோல் மற்ற தொழுகை நேரங்களில் தன் அலுவலகப் பணிகளை, வணிகப் பணிகளை ஒதுக்கி வைத்து தொழுகைகளில் ஈடுபடுகிறார். இதன் மூலம் தனக்கு வருமானம் போன்ற பெரும் பயன் அளிக்கவல்ல நேரங்களைத் தொழுகையாளி தியாகம் செய்கிறார்.

நோன்புக் கடமையை நிறைவேற்ற முனையும் நோன்பாளி, நோன்பின்போது, தான் விரும்பிப் பருகி