பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207


இன்று சின்னஞ்சிறிய கிராமமாக உருமாறி விட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், மனிதன் பெற்ற கல்வியறிவும் அதனை ஆதாரமாக் கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகளுமேயாகும்.

விரிந்து வரும் அறிவு

ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் அறிவை அளித்திருக்கிறான். ஆனால், அவ்வறிவு குடத்துள் வைக்கப்பட்ட குத்து விளக்காக உள்ளது. ஆனால், மனிதன் தன் முயற்சியால் - உழைப்பால் குடத்துள் வைக்கப்பட்ட அறிவை குன்றின் மேல் ஏற்றப்பட்ட பேரொளியாக வளர்த்து, வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அது மனிதன் கையிலேதான் உள்ளது. அறிவை வளர்க்கும் அற்புதச் சாணையாக சிந்தனா சக்தி அமைய வேண்டும். உலக உயிர்களிலே சிந்திக்கும் சக்தியை - பகுத்தறியும் பண்பை இறைவன் மனிதனுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். அப்பகுத்தறிவை வளர்த்து வளப்படுத்தும் வளர்ப்புப் பண்ணையே கல்விக் கூடங்கள். கல்வி பெறும் கடமையை ஆணுக்கு மட்டுமல்ல, பெண்ணுக்கும் கட்டாயக் கடமையாக்கியுள்ளான் வல்ல அல்லாஹ். ஆனால், நம்மில் ஒரு சிலர்தான் அக் கடமையை ஒரளவு நிறைவேற்றி வாழ்வில் நலமும் வளமும் பெறுகிறோம். இதனை சில சமுதாயங்கள் திறம்படச் செயல்படுத்தி தங்கள் நிலையை தொடர்ந்து மேம்படுத்தி மேட்டுக் குடியினராக ஆகிவிடுகின்றார்கள். ஆனால், இஸ்லாமிய சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணத் தக்க விழுக்காட்டினரே போதிய அளவு கல்வியறிவு பெற்று வாழ்வின் உயர் நிலையை அடைகிறார்கள். படித்தவர்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தைப் பெருக்கிச் சமுதாயத்தில் உச்ச நிலை பெறுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணத்தக்கதேயாகும்.

கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை இன்றும் நம் இஸ்லாமிய சமுதாயத்தில் போதிய விழிப்புணர்ச்சி