பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

217


விடுகிறது. வாழ்க்கையில் மேலும் உயர முடியுமே தவிர தாழ வழியில்லை.

இதையெல்லாம் கேட்கும்போது உங்களில் சிலர் நினைக்கலாம். ஏதோ ஒரு சூழலில் படிக்க இயலாமல் போய்விட்டது. இங்கு வந்து கஷ்டப்படவேண்டியதாகி விட்டது. இனிமேல் நாம் படித்து முன்னேறவா முடியும்? நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்ற தொய்வு மனப்பான்மையில் தங்களுக்குள் குமையலாம். அப்படிக் குமையவோ மனத் தளர்ச்சி கொள்ளவோ வேண்டியதில்லை. படிப்புக்கு வயது வரம்பே கிடையாது. வாழ்நாள் முழுமையும் கல்வியறிவு பெற முடியும். வேண்டியதெல்லாம் எழுச்சி, உணர்வு, முயற்சி, உழைப்பு.

ன்றும் கல்வி

‘வாழ்நாள் கல்வி' என்ற முழக்கம் எங்கும் எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் வளரா நாடுகளிலும் இம் முழக்கம் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. படிக்க இயலாமல் போனவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லாமல், தேர்வு எழுதி வெற்றியடைவதற்கு, பட்டம் பெறுவதற்கு பல்வேறு வாய்ப்புகளைப் பல்கலைக் கழகங்கள் இன்று உருவாக்கி உதவி வருகின்றன. அஞ்சல் வழிக் கல்வி என்பது பணியாற்றிக் கொண்டே, வாழ்க்கைக்கு வேண்டிய வருமானத்தைத் தேடிக் கொண்டே, மேன்மேலும் படிக்க, அதன் மூலம் உத்தியோகத்தில் உயர்ந்து கொண்டே செல்ல இனிய வாய்ப்பு இன்றைய தலைமுறைக்கு வாய்த்திருக்கிறது. இவ் வாய்ப்பைப் பயன்படுத்தி, அஞ்சல் வழிக் கல்வி மூலம் பட்டம் பெற்று, பணியில் உயர்ந்தவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். தாய் நாட்டில் வாழ்பவர்களுக்குத்தான் இந்த வாய்ப்புண்டு, வேற்று நாட்டில் வாடும் நம் போன்றவர்கட்கு அவ் வாய்ப்புக்கு வழியில்லை என்று