பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221


உரையாடுகிறீர்கள். அவர்களும் உங்கள் விருப்பப்படி ஈச்சம்பாய் விரித்த கட்டிலில் அமர்ந்து பேசிச் செல்கின்றனர். ஆனால், மன்னர் என்ற முறையில் உங்கள் ஆடைக்கும் அவர்கள் ஆடையலங்காரங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆடையலங்காரங்களைத் தாங்கள் விரும்பாவிட்டாலும் வரும் மன்னர்கள் அவற்றை விரும்பி எதிர்பார்க்கலாமல்லவா? அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவாவது, அவர்களைச் சந்திக்கும் சமயத்தில் டாம்பீகமான ஆடம்பர ஆடையணிகள் அணியா விட்டாலும் ஒரளவுக்கு சிறப்பான ஆடையணிந்து, வரும் மன்னர்களைச் சந்திக்காலாமே?” என்று கேட்டு விட்டார்.

இதைக் கேட்ட பெருமானார் (சல்) புன்னகையித்தவராக ‘என்ன, உமர் அவர்களே! ஆடையலங்காரத்துக்கு இவ்வளவு முதன்மைதர முனைந்து விட்டீர்கள். எவ்வளவு எளிமையோடு வாழ்கிறோமோ அந்த அளவுக்கு சொர்க்கத்தில் நிறைந்த வெகுமதிகளை வல்ல அல்லாஹ் அளித்து மகிழ்விக்கிறான் என்பதை நீங்கள், அறியவில்லையா? எனக்குக் கிடைக்கவிருக்கும் அந்த வெகுமதிகள் எனக்குக் கிடைக்கக் கூடாது என்பது உங்கள் விருப்பமா? எளிமையாக வாழ்ந்து அந்தச் சொர்க்கப் பேரின்பங்களைப் பெறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?’ என அண்ணலார் எதிர் கேள்வி கேட்டபோதுதான் எளிமையில்தான் இறைவனுடைய அருள் பூரணமாகப் பொழியும். அத்தகையவர்களுக்கே அல்லாஹ் அனைத்து வெகுமதிகளையும் தந்து மகிழ்விக்கிறான் என்ற பேருண்மை புரிந்தது. தனது ஆடம்பர உணர்வு எவ்வளவு தவறானது என்பதும் தெளிவாகிறது.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஆடம்பர - டாம்பீக வாழ்வை அனாவசியச் செலவுகளைக் கடிந்தார்களே தவிர அவசியச் செலவு செய்ய வேண்டுமெனப் பணித்தார்கள். அத்தகைய அவசியச் செலவுகளிலே