224
உலகில் கோடானுகோடி மக்கள் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். “நெருநல் ஒருவன் உளன், அவன் இன்று இல்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு” என்று கூறுகிறார் வள்ளுவர். "நேற்று ஒருவன் இருந்தான், அவன் இன்று இல்லை எனும் பெருமையை உடையது இவ்வுலகு” என்பது இக் குறளின் கருத்து. அவர்களுள் ஒரு சிலர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வரலாற்றில் அழியாத் தடம் பதித்தவர்களாக, வாழும் மக்களின் நினைவில் நிழலாடுபவர்களாக அமைகிறார்கள். அத்தகைய மா மனிதர்களில் ஒருவர் பெயர் மக்களால் நினைக்கப் படுவதற்கு மட்டுமல்லாது, உலக முழுக்க உரத்த குரலில் இருபத்து நான்கு மணி நேரமும் ஒலிக்கப்படுகிறது. அதுவும் இடையறாது ஒலிக்கப்படுகிறது. உலகம் முழுமையும் ஒவ்வொரு விநாடியும் இடைவிடாமல் ஒலிக்கப்படுகிறதென்றால், அது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் திருப்பெயர்தான் அவ்வாறு ஒலிக்கப்படும் பேறு பெற்ற பெயராக அமைந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு ஒரு கோடி முறை
நாள் முழுமையும் ஐவேளைத் தொழுகைக்காக பள்ளி