பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228


அனைத்துத் துறைகளிலும்

திருமறையில் 'தங்களில் அழகிய முன்மாதிரி அமைந்துள்ளது' என்று கூறியதற்கொப்ப அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் வாழ்ந்து காட்டுபவராயினர். முந்தைய நபிமார்கள் வாழ்வை எண்ணிப் பாருங்கள். அவர்களில் சிலர் கணவராக, தந்தையாக வாழந்ததில்லை; சிலர் ஆட்சித் தலைவராக, இன்னும் சிலர் படை நடத்தும் படைத் தளபதியாக வாழும் வாய்ப்பைப் பெற்றவர்கள் இல்லை. ஆனால், அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித வாழ்வில் எத்தனை படித்தரங்கள் உண்டோ அத்தனை படித்தரங்களிலும் முழு வாழ்வு வாழ்ந்து முடித்த பெருமை பெருமானாருக்கு உண்டு. .

அன்றும் இன்றும் என்றும்

பெருமானாரின் பெரு வாழ்விலும் அதற்கு ஆதார சுருதியாயமைந்த திருமறையிலும் கூறப்படாத செய்திகள் எதுவுமே உலகில் இல்லை எனலாம். உலகில் அன்று முதல் இன்று வரை ஏன் நாளை தலைதூக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு திருமறையிலும் பெருமானார் பெருவாழ்விலும் காணக் கிடக்கின்றது. இதைத்தான் வியந்து வியந்து பாடுகிறார் தக்கலையின் மிக்க புகழ் மெய்ஞ்ஞானி பீர் முஹம்மது அப்பா அவர்கள். “அறிவு வகை எத்தனை என்று அறிய வகை இல்லை; அத்தனையும் அவன் உரைத்த அருமறையுள் அடக்கம்” என்பது அவர்தம் வாக்கமுதாகும். பீர் முஹம்மது அப்பா மாபெரும் மெய்ஞ் ஞானி. நாமெல்லாம் எண்ணி யெண்ணிப் பெருமைப் படத்தக்க அளவுக்கு உயர்ந்த கருத்துகளை, சிந்தனைகளை, ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை நம்மிடையே பத்தாயிரம் பாடல்கள் மூலம் பரப்பிய மாபெரும் மேதை.

பீரப்பாவைக் காட்டிலும் நமக்கெல்லாம் மிக நன்றாக அறிமுகமானவர் குணங்குடி மஸ்தான்தான். திருமுறை