22
அகவாழ்வு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். மற்றொன்று புற வாழ்வுத் தொடர்பான பிரச்சினைகள்.
அகவாழ்வுப் பிரச்சினை என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வின் - குடும்பம் தொடர்பான பிரச்சினைகள். புறவாழ்வுப் பிரச்சினை என்பது ஒருவனது புறவாழ்வின் - குடும்ப வாழ்வுச் சூழலுக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பதாகும்
இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் ஒருவன் தன் வீட்டிலிருக்கும்வரை தனி மனிதர். அவர் வாசற்படியைவிட்டு இறங்கி சாலையில் கால் வைத்தவுடன் அவர் சமுதாய மனிதராகி விடுகிறார். இவ்வாறு ஒரே சமயத்தில் ஒவ்வொருவரும் தனி மனிதராகவும் சமுதாய மனிதராவும் இரு நிலைகளில் வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை
அக - புறப் பிரச்சினை தீர, ஆன்மீக - அறிவியல் வழிகள்
இத்தகு பிரச்சினைகள் இரண்டும் சேர்ந்ததுதான் ஒட்டுமொத்தமான உலகப் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி?
இதற்கு இஸ்லாம் மிக அற்புதமாக வழி வகுத்துத் தந்துள்ளது. அக, புற வகைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இருவகைத் தீர்வு முறைகளை இஸ்லாம் வகுத்தளித்துள்ளது
அகவாழ்க்கையினுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்றால், அக வாழ்க்கை செழுமையாக அமைய வேண்டுமென்றால், அகவாழ்க்கையிலே இன்பம் பூத்துக் குலுங்க வேண்டுமென்றால் அதற்கு ஆன்மீக அடிப்படையில் தீர்வு காண முயல வேண்டும். அதற்கான தீர்வினைக் கண்டு விட்டால் நம் வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கும் இன்பச்சோலையாக மாறிவிடும்