பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266


இஸ்லாம் தரும் ஆக்கச் சிந்தனை

பெருமானாரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும்போது அண்ணலார் வாழ்வையும், வாக்கையும் அலசி ஆராயும் அரிய வாய்ப்பைப் பெறுகிறோம். அப்போது நாம் அண்ணலார் பற்றி அறிந்திராத அல்லது அறிந்தும் மறந்துவிட்ட பல பயனுள்ள செய்திகளை, நினைவுகளை இத்தகைய விழாக்கள் மூலம் மீண்டும் பெற வாய்ப்பாயமைகின்றது. மீலாது விழாவை முஸ்லிம்கள் மட்டும் கூடும் கூட்டமாக அமைக்காமல் பல்வேறு சமயத்தினரும் பங்கேற்கும் கூட்டங்களாக அமைக்கப்பட வேண்டும் என்பதில் நான் பேரார்வம் கொண்டவன். ஏனெனில் நாயகத் திருமேனியும் அவர் வாயிலாக உலகுக்கு வழங்கப்பட்ட இறைவேதமான திருக்குர்ஆனும் முஸ்லிம்களுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை. உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி இறைத் தூதர், இறுதி வேதம் என்பதை நாம் உணரவேண்டும். இதை நம்மைவிட நம் சகோதர சமயத்தவர்கள் இன்று மிக நன்றாகவே உணர்ந்து வருகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.