பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவ ரென்று சிலரை வைத்தோம். அவர்கள் சொற்படி தகுந்த முறையில் போர்பு ரிங்தால், வெற்றி கிட்டிடும். பலத்த சண்டை போடும் போது தலைவர் யாரெனப் பார்த்துக் கண்டு பிடிப்ப தற்கே சிரம மாகுதே ! ஆத லினல் குச்சி யாலே குல்லா செய்துகாம் அவர்கள் தலையில் மாட்டி வைப்போம், கண்டு கொள்ளவே. சேதம் ஏதும் இன்றி அவர்கள் காட்டும் வழியிலே சென்று வெற்றி பெறுவோம்’ என்றே எடுத்து ரைத்தது.

  • சரிதான் என்றே கூறி அவைகள்

குல்லா செய்தன. தலைமை தாங்கும் எலிகள் தலையில் மாட்டி விட்டன. பெருமை போடு தலைமை எலிகள் முன்னே சென்றன. பின்தொ டர்ந்து மற்ற எலிகள் போக லாயின. 99