பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பல் ஒன்று சுற்றிலும்
கூடி அன்று நிற்கையில்,
அம்பு போலப் பாய்ந்துமே
அங்கோர் பையன் வந்தனன்.

இரைக்க இரைக்க வந்தவன்
‘என்னே! நமது சோதிடர்
இருக்கும் வீடு தீயிலே
எரியு’ தென்றே கதறினன்.

பையன் சொல்லைக் கேட்டதும்
பதறி எழுந்த சோதிடர்,
‘ஐயோ, அப்பா!’ என்றுமே
அலறி ஓட்டம் பிடித்தனர்.

முன்னால் அவரும் வேகமாய்
மூச்சுப் பிடித்து ஓடவே,
பின்னால் அவரைத் தொடர்ந்தது,
பெரிய கூட்டம் ஒன்றுமே.

நாடி தளர்ந்து விட்டது.
நாக்குத் தொங்கிப் போனது.
ஓடி வந்தார் அப்படி,
உடல்கு லுங்கச் சோதிடர்!

‘மனைவி மக்கள் தீயிலே
மடிந்து, வீட்டில் உள்ளவை
அனைத்தும் பொசுங்கிச் சாம்பலாய்
ஆன’ தென்றே எண்ணினர்.


108