பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எண்ணம் போல வீட்டிலே
எதுவும் நடக்க வில்லையே!
என்றும் உள்ள நிலையிலே
இருந்த வீட்டைக் கண்டனர்.

புரளி செய்த பையனைப்
பிடித்துக் கொண்டு சோதிடர்
மிரட்டிக் கேட்க லாயினர்.
மீசை இரண்டும் துடித்தன.

‘நாட்டுக் கெல்லாம் சோதிடம்
நானுரைப்பேன் என்கிறீர்.
வீட்டில் தீ, தீ என்றதும்,
விழுந்தடித்து வருகிறீர்!

எந்த விஷயம் நடப்பினும்
எனக்குத் தெரியும் என்கிறீர்.
சொந்த விஷயம் அறிந்திடச்
சோதி டத்தால் முடிந்ததோ?

பையன் இதனைச் சொன்னதும்
பக்கம் இருந்த அனைவரும்
கையைத் தட்ட லாயினர்;
கலக லென்று சிரித்தனர்!


109